வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது எப்படி?



கென்யா, தான்சானியா, ஏமன்,மத்திய பிரதேஷ் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் படையெடுத்து உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க 2  சிறந்த எளிமையான வழிகள் உள்ளது.

1. தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது.  [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்]

தங்கள் காட்டுக்குள் வரும் பொழுது இதனை தீ வைத்து எரிக்க, புகைமூட்டம் சூழ வேகமாக வெட்டுக்கிளி திசை மாறும், வெளியேறிவிடும்.

மிளகாய் மார் மிக நன்றாக வேலை செய்யும்

2. மிளகாய் மார் கிடைக்காத நிலையில் , மிளகாய் பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து புல்லுடன் எரிக்க புகைமூட்டம் வரும். இந்த புகைக்கு வெட்டுக்கிளி ஓடிவிடும்.

இந்திய ஹாக்கி அணியின் ஹாட்ரிக் தங்கப்பதக்க சாதனையின் ஹீரோ பல்பீர்சிங்!!!

அது ஒரு ‘பொற்’காலம், இந்திய ஹாக்கி அணிக்கு. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை கிரிக்கெட் விழுங்காத காலம். 1928ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 6 முறை தங்கப்பதக்கம் வென்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.



இரண்டாம் உலகப்போர் முடிந்து, இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து 1952 ஹெல்சிங்கி, 1956  மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது இந்திய அணி. 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப்பதக்கம் வாங்கித் தந்தவர் பல்பீர்சிங் (சீனியர்). அதற்கு முந்தைய இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி பங்கேற்று தங்க மெடல் பெற்றவர். ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸில் இறுதிஆட்டத்தில் நெதர்லாந்தை 6-1 என்ற கோல்கணக்கில் இந்தியா  வெல்ல, அதில் 5 கோல்களை அடித்தார் பல்பீர் சிங். 1956ல் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வென்றது பல்பீர் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி.

 ஹாக்கியில் ஏற்பட்ட புதிய தொழில்நுட்பங்கள், ஐரோப்பிய விளையாட்டுக் களங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் செல்வாக்கு 1960களிலிருந்து குறையத் தொடங்கியது. பாகிஸ்தான் தனது அதிரடி ஆட்டத்தால் தங்கப்பதக்கம் வெல்ல ஆரம்பித்தது. நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மன் போன்ற அணிகள் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற ஆரம்பித்தன. இந்தியாவின் பதக்கக் கனவு கானல் நீராகத் தொடங்கியது.

1980ல் சோவியத் யூனியனின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கத்திய நாடுகள் பலவும் பாகிஸ்தானும் பங்கேற்காத நிலையில், இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி வெற்றிபெற்றதே, கடைசி ஒலிம்பிக் தங்கமாக உள்ளது. ஆறுதல தந்த அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது நமக்கு பெருமை.

1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியின் ஹாட்ரிக் தங்கப்பதக்க சாதனையின் ஹீரோ பல்பீர்சிங் சீனியர் தனது 96வது வயதில் நேற்று மரணமடைந்துவிட்டார். இந்திய ஹாக்கி அணி நெடுங்காலமாக மரணப்படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறது.

நன்றி அண்ணன் கோவி லாலின்

வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.''

#திப்பு_சுல்தான் ...

இது, திப்பு சுல்தான்  தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்.
1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான பெய்லியைச் சிறைபிடித்து தந்தையான ஹைதர் அலியிடம் அழைத்துச் சென்றார் திப்பு சுல்தான்.

திப்புவின் சிதைக்கப்படரட அரண்மனை

அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர் வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது. அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த் திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்.
பாடம் நடத்தினர்.
பழிவாங்க காத்திருந்தனர்.

திப்புவின் அடக்கவிடம் 


''மக்களின் நன்மைக்காக!''

இந்தப் போர் திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது. இதயத்தையே வறுத்தெடுத்தது . இரவுபகல் எல்லாம் சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம் திப்பு சுல்தான் முதன்முதலாக பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண ஓடினார் .
கண்டதும் கதறினார்.
 கட்டியணைத்து ஆறுதல் சொன்னார். ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார். காயங்களையும் சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த ஹைதர் அலி... திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார்.


வாலிப வயதில் இவ்வளவு பெரிய வலியையும் வேதனையையும் கண்டிராத திப்பு அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை உதிர்த்தார்.
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
அந்த வலிதான் அவரை அப்படிச் சிந்திக்கவைத்தது.
சிகரத்தில் ஏற்றியது .
சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.

தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய திப்பு சுல்தான்
 ‘மக்கள் அரசை நேசிக்க வேண்டும்... அரசு மக்களை நேசிக்க வேண்டும்’
என்ற நல்லெண்ண அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுசென்றார் .
உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்; உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை உரிமையாக்கினார் .
குறிப்பாக ...
மது உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடைவிதித்தார்.

இதுகுறித்து மிர் சாதிக் என்பவர்,
‘‘மது விற்பனையைத் தடை செய்தால் அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார்.
அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான். அரசாங்கத்துக்காக அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான். அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’ என்று பதிலுரைத்தார்.


திப்பு வீர மரணம் அடைந்த இடம்

ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!

* எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது .
* சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது
 என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான் துரோகிகளைக்கூட மன்னித்துவிடக் கூடியவர் . எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர் . எல்லா மதங்களையும் உயர்வாகக் கருதியவர்.
எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.

ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார். ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார் திப்பு. ‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க, ‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன் முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’ என்று பதிலளித்தார்.
அதேபோல் ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர் கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது
இறுதிவரை போராடிக்கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில் இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன் கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல். எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
" உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’ என்று பாராட்டினார்.
மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்,
 ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.

'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர், ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு இறந்துபோனார் திப்பு. இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத் தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.

நன்றி ...
#விகடன்
மறுபதிப்பு

20 குழந்தைகளுக்கு பாலூட்டும் தாயுள்ளம்...

கடந்த வாரம் ஆப்கான் தலைநகரம் காபூலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற தாக்குதலில் பிரசவ வார்டில் அனுமதிக்கபட்டிருந்த 24 பெண்கள் மரணமடைய, நர்சுகள் டாக்டர்கள் உட்பட 80 பேர் படுகாயம் அடைந்தநர்.



மரணமடைந்த பெண்கள் மற்றும் உயிருக்கு போராடுபவர்களின் 20 பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் கிடைக்காமல் அவதிப்படும் தகவல்  செய்திகளில் வெளியானது.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் தாய்ப்பாலுக்கு ஏங்கும் தகவல் கேள்விப்பட்ட ஆப்கானிஸ்தான் நிதித்துறையில பணியாற்றும்  Feroza Younus Omar எனும்  26 வயதான பெண்மணி பாலூட்ட முன்வந்து மருத்துவமனைக்கு விரைந்தார்...

பிறந்து 14 மாதம் மட்டுமே ஆன தன்னுடைய குழந்தைக்கு காலையில் ஒரு முறை பாலூட்டி விட்டு மருத்துவமனைக்கு செல்லும் feroza சுழற்சி முறையில் கடந்த ஆறு நாட்களாக 20 குழந்தைகளுக்கும் தாயுள்ளதோடு  மாறிமாறி பால் புகட்டும் மகத்தான நற்செயலை செய்து வருகிறார்...
Colachel Azheem

யாழ்ப்பாண நூலகம் எத்தனை பேருக்கு தெரியும் அறிவு களஞ்சியம் அதுவென்று


#யாழ்_நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,  வரலாற்று சிறப்புமிக்க நூல்கள் , தமிழர்களின்  அறிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் செயல்பாடுகள், அகத்தியர், திருமூலர் மற்றும் சித்தர் பெருமக்களின் மருத்துவ ஆராய்ச்சிகள் என்று பெருமை பொக்கிஷகங்கள் இந்நூல்நிலையத்தில் இடம்பெற்றிருந்தன.  ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இனவெறியர்கள் 1981 மே 31 தேதி தீ யிட்டு கொளுத்தபட்டது. பெரும் நூல்கள் களவாடபட்டது. எங்கே போன்ற?  யாரிடம் சேர்க்கபட்டது ? யார் அறிவார். அத்தனையும் தொலைத்துவிட்டு அரசியல் லாபமட்டுமே கருதி அந்நிகழ்வே மறக்கடிக்கபட்டது. உலக வாழ்க்கையில்  நாம் இறக்கும்போது நம்முடன் வருவது நாம் கற்றுக் கல்வி மட்டுமே அதை கூட பிறர்க்கு பயன்படட்டும் என்று கருதுபவன்  ஆதி தமிழர்,
  அதையும்  ஒடுக்குமுறை சக்தியால்  அளித்தேவிட்டனர்.
புத்தகம் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். நூல்கள் படிக்க மிகவும் பிடிக்கும்.பொழுது போக்காகவே வாழ்க்கையை கொண்டாடி விடலாம் பொழுது போக்குகளுக்கு ஆகவே சினிமா டிவி இப்படி கண்டுகளித்து கொண்டு காலத்தை கழித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியிலும் இன்னும் எத்தனையோ பேர் தேடித்தேடி நல்ல நூல்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .கற்று அறிந்ததை அவர்கள் அவர்களோடு முடக்கி வைத்துக்கொள்ளாமல் கற்றறிய பலரிடம் பகிர வேண்டும் ஆனால் சரியான தகவல்களை நல்ல பல விஷயங்களை வாழ்வில் மறக்க முடியாத மறக்க முடியாது என்பது கற்ற கல்வியே அன்றி வேறு எதுவும் இல்லை.
ஊரடங்கும் ஏறிவிட்டோம் உயிர்க்கொல்லி நோயையும் இயல்பை வாழ பழகிக் கொண்டு விடுவோம். அறிவு என்பது மங்கிப் போய்விட்டது அறிவு என்பது பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுத்தாமல் வாழும் காலத்திலேயே நல்ல பல அரிய நூல்களை படித்து அறிய வேண்டுகிறேன்.
#Readewisely

#தமிழர்_என்ற_இனமுண்டு_தனியே_அவர்களுக்கு_குணமுண்டு
( அது_தான் _மறதி).

வருந்துகிறேன். ..
என்றும் பேரன்புடன் முனைவர் அர க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்

நன்றி Vikram karnan

ஒரு யானை காட்டையே உருவாக்கும் !!!

* ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் யானை உருவாக்கும்.



* ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000  மரங்களை நடுகிறது.

*ஒரு யானை ஒரு நாளைக்கு 300-500 விதைகளை விதைக்குது.

*யானையின் சாணத்திலிருந்து 10 கிலோ விதைகளும் குச்சிகளும் மீண்டும் மண்ணில் விதைக்கப்படும்.

*யானையின் சாணத்தில் 25கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும்.

*250 கிலோ உணவில், 10% விதைகள் இருக்கும்.

* யானை ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*ஒரு நாளைக்கு யானை 200-250 கிலோ உணவு சாப்பிடும்.


'வாராரு வாராரு அழகர் வாராரு பாடல் இப்படித்தான் உருவானது...' - நெகிழும் தேவா, பெருமிதப்படும் #வைரமுத்து!

திருவிழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பெயர்போன ஊர் மதுரை. அங்கு, வருடத்தின் 12 மாதங்களும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அவற்றின் உச்சம்  'சித்திரைத் திருவிழா.' மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றப்படுவதிலிருந்து மதுரையின் கொண்டாட்டமும் தொடங்கிவிடும். அதற்கடுத்து அழகர் கோயில் திருவிழா களைகட்டும்.

மீனாட்சியம்மனின் திக்விஜயம் முடிந்த பிறகு, மதுரை மக்கள் மீனாட்சியைத் தம் வீட்டுப்பெண்ணாகப் பாவித்து, சொக்கனை மாப்பிள்ளையாக வரித்துக்கொண்டு, திருக்கல்யாண வைபவத்தைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

அழகர் தங்கச் சப்பரத்தில் ஏறி தன் தங்கையின் திருமணத்தைக் காண புறப்பட்டு வரும்போது மதுரையின் பட்டிதொட்டியெங்கும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்னும் பாடல் ஒலிக்கும். சித்திரைத் திருவிழா தொடங்கினாலே 'அழகர் பாட்டு' பீவர் வந்துவிடும் மதுரைவாசிகளுக்கு. 

'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் 1999-ம் ஆண்டு வெளியான 'கள்ளழகர்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை 20 வருடங்களாகப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்தப் பாடல். எத்தனையோ பாடல்கள் மதுரையைப் பற்றியும் அழகரைப் பற்றியும் வந்துவிட்டாலும் இந்தப் பாடல், உயிர்த்துடிப்போடு விளங்குகிறது.

திருவிழாவில் மற்ற பாடல்களைவிடவும் கூடுதலான கவர்ச்சி, இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் எப்படி வந்தது? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரின் மூளைக்குள்ளும் துள்ளல் மயக்கத்தைத் தரும் இந்தப் பாடலின் இசையமைப்பாளர் தேவா அவர்களிடம் பேசினோம்.

"சிவன், விஷ்ணு, முருகன், ஐயப்பன் என்று ஒவ்வொரு கடவுள்களோட வழிபாட்டு இசைவடிவங்களும் ராகங்களும் வெவ்வேறா இருக்கும். வைணவத்துல வழங்கப்படுகிற இசைவடிவம், பெருமாளுக்கானது. ஆனால், கள்ளழகருக்கு ஓர் தனித்த இசை வடிவத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துதான் அழகருக்கான பாரம்பர்யமான வாத்தியங்களை இசைக்கோர்வையாகச் சேர்த்து உருவாக்கினோம்.

குலவைச் சத்தம், கொம்பொலி, உருமிமேளம் இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கோத்த இசை அது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னமே நிறைய பக்தி ஆல்பம் பண்ணியிருக்கேன். அழகர் பாடல்களும் நிறைய செய்திருக்கேன். அதனால எனக்கு அனுபவம் இருந்திச்சு. பாட்டு பண்ணியாச்சு. இப்போ வரைக்கும் பல்லாண்டு காலத்துக்கும் மக்கள் ஆடிக் களிக்கிற அளவுக்கு இந்தப் பாட்டு வந்ததுல எனக்கு அளவில்லா ஆனந்தம்!

போன வருஷம் அழகர் ஆத்துல இறங்கும்போது மதுரையில ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். நான் அமைத்த அந்த இசை அழகரை வரவேற்று எங்கெங்கும் ஒலித்துக்கொண்டிருந்ததை நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னோட பொண்ணுகளை மதுரை மாப்பிள்ளைகளுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கேன். ஒவ்வொரு வருடமும் பிள்ளைங்க சொல்லுவாங்க, 'உங்க குரல்தான்பா எல்லாப் பக்கமும்'ன்னு. எல்லாம் பூர்வ ஜென்ம பாக்கியம். எனக்கு அழகரும் மீனாட்சியும் தந்த பெருமை இது. இந்தப் படத்தோட இயக்குநர் பாரதிக்கும் பாடலாசிரியர் வைரமுத்துசாருக்கும் என்னோடு இணைந்து குரலில் ஜோடிபோட்ட எஸ்.ஏ.ராஜ்குமாருக்கும் என் நன்றிகள்" என்றார். 

பாடலை எழுதிய பாடலாசிரியர் #கவிப்பேரரசு_வைரமுத்துவிடம் பேசினேன். பாட்டெழுதிய அனுபவத்தை தனக்கே உரிய சந்தமொழியில் சொன்னார்.

"படத்தின் தலைப்பு, 'கள்ளழகர்'. இந்தப் பாடல், சமூகத்துக்கான பாடலாக உருமாறுமென்று அப்போது எங்களுக்குத் தெரியாது. படத்துக்குப் பொருந்தும் என்று எழுதியது ஆன்மிகத்துக்கும் பின்னாளில் பொருந்திவிட்டது. வசனமோ, பாட்டோ... திரையோடு நிற்பதைவிடவும் மக்களின் வாழ்வோடு நிற்கும்போதுதான் நிலைபெறுகிறது. எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தும்.

பாண்டிய மன்னனின் அரண்மனைகளெல்லாம் அழிந்துவிட்டன. ஆனால், அவன் கட்டிய கோயில்கள் நிலைபெற்றுவிட்டனவே. அரண்மனை, தனியுடைமை. கோயில், பொதுவுடைமை. மக்கள் தங்கள் கையிலெடுத்துப் பாதுகாக்கத் தொடங்கிவிடுகின்ற எதுவும் வரலாறாய் நிலைகொள்ளும். இதை வரலாறும் சொல்லும். இன்னொன்று, நான் சமயப் பிரசாரகன் அல்லன். கடவுள் உணர்வை மறுக்கின்ற எவருமே, மக்களின் தெய்வ நம்பிக்கையை எப்போதும் மதிப்பர். நானும் அப்படியே. நான் மக்களையும் அவர்களின் உணர்வையும் மதித்ததால்தான் என்னால் இதை எழுத முடிந்திருக்கிறது. மக்கள், அவர்களின் உணர்வைப் புரிந்த என்னையும் நான் எழுதிய வரிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தப் பாட்டெழுதுகையில் மதம், சாதி என்ற எந்தச் சாயமும் வரிகளில் வந்துவிடக் கூடாது எனக் கவனமாக இருந்தேன். கள்ளழகரும் அவர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் பல நூற்றாண்டுப் பண்பாடு மிக்கது. அந்தப் பண்பாட்டை என் பாட்டில் வைத்தேன். அந்தக் கொண்டாட்டத்தின் உணர்ச்சிப் பெருக்கை மொழியாக வடித்தேன். அதனால்தான் இப்போது அது காலம் கடந்து நிற்கின்றது. இந்தப் பாட்டுக்கு வழிசெய்து கொடுத்த இசையமைப்பாளர் தேவா, படத்தின் நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு என் அன்புகள்" என்றார்.

'சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே

சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே

உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே

சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!

வெள்ளி மலையில சாமியடி - இது

ஏழைங்க பக்கமே நிக்குமடி

நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி

நாடுமுழுக்க நன்மையடி

தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம

வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி

கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம்

கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி

வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம்

அழகர் வாழியவே

கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம்

மதுரை வாழியவே

கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம்

இதயம் வாழியவே!'

வைகை ஆற்றின் கரையோரங்களில் பண்பாட்டுப் பாடலாக ஒலிக்கத்தொடங்கிவிட்டது ‘வாராரு வாராரு அழகர் வாராரு’ பாடல். இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டே தன் தங்கையின் திருமணத்தைக் காண புறப்பட்டுவிட்ட அழகர் நாளை வைகையில் இறங்குகிறார். தண்ணீரைத் தெளித்து அழகரை வரவேற்போம்.

நன்றி : விகடன் 2019.

வைட்டமின்-டி குறைபாடு கொண்டவர்களின் உயிரைக் குடிக்கும் கொரோனா :விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்

வைட்டமின்-டி சத்து குறைபாடு கொண்டவர்களின் உயிரை அதிக அளவில் கொரோனா வைரஸ் காவு வாங்கியிருப்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.



சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இதனிடையே கொரோனா எப்படிப்பட்டவர்களை தாக்குகிறது? என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்றி உயிரிழப்பை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றினால் பலியானவர்கள் பற்றிய இந்த ஆய்வில் எந்த குறைபாட்டினால் கொரோனா நோயாளிகள்கள் அதிகம் இறந்துள்ளனர் என ஆராய்ந்துள்ளனர்.இந்த ஆய்வின் முதல் கட்டத்தில் முடிவில் பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு இருந்திருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. பின், கொரோனா நோயாளிகளுக்கு உடலில் வைட்டமின் டி சத்தை அதிகப்படுத்திப் பார்க்குமாறு மருத்துவர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைத்தால் விரைவாக குணமடையும் கூடுதலாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாடுதான் கொரோனா எளிதில் பாதிக்கக் காரணமாகவும் உள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.சூரிய ஒளியில் இருப்பதுதான் வைட்டமின் டி சத்தைப் பெற சிறந்த வழி. சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா போன்ற மீன்களிலும் வைட்டமின் டி சத்து இருக்கும். முக்கியமாக காலா மீனில் அதிகமாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கரு. ஆரஞ்சுப் பழம், தானியங்கள், சோயா, பாலாடை, காளான் முதலியவை மூலம் வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

மகாத்மா காந்தி ஆண்டிபட்டிக்கு விஜயம் செய்தார்

ஆண்டிபட்டி ரயில்வே நிலைய வரலாறு: -

 பிப்ரவரி 9, 1934 அன்று, மகாத்மா காந்தி ஆண்டிபட்டிக்கு விஜயம் செய்தார், தேனியில் இருந்து மாலை 5:30 மணிக்கு ரயிலில் வந்தார். [1]  ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில், ஆண்டிபட்டி கிராமவாசிகள், அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஒரு பெரிய கூட்டத்துடன் அவரைப் வரவேற்றனர். 


ஆண்டிபட்டி இரயில் நிலையத்தின்,முதலாவது நடை மேடையில் ஒரு மர மேஜை வைக்கப்பட்டது, காந்தி அதைக் கூட்டத்தில் உரையாற்ற ஒரு டெஸ்க் ஆக பயன்படுத்தினார். [2]  காதி துணி மற்றும் மரத்தாலான பிரேம்களில் அச்சிடப்பட்ட தமிழில் ஒரு வரவேற்பு பத்திரம் வழங்கினர். திரு பி.சி.ராஜன்  தனக்கு பிடித்த காதி துணியில் அச்சிடப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த,p.c ராஜன் மற்றும் காந்தியிடம் ஒப்படைத்தார். காந்தி தனது சுற்றுப்பயணத்தில் அதை தன்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினார், ஆனால் அவர் தனது பயணத்தின் மூலம் அனைத்தையும் சுமக்க முடியாது என்பதை உணர்ந்தார்.  எனவே கிராம மக்களின் அனுமதியுடன் நினைவு பரிசு ஏலம் விடவும், நிதியை நலத்திட்டத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்தார்.  பி.சி.  ராஜன் வெற்றிகரமாக ஏலம் எடுத்தார், அவர் காந்தியின் கைகளிலிருந்து நினைவு பரிசுகளை சேகரித்தார்.  1960 களில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு திரு. ராஜன் நன்கொடை அளித்தார்.

நன்றி
S.Vinoth Kumar Sedhuraj

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளால் அழியும் விவசாயம்

ஒரே நாளில் 35,000 பேர் சாப்பிடும் அளவு தின்று தீர்க்கும் அபாயம்..!



பாகிஸ்தானில் இருந்து கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் உலகையே மிரட்டிக் கொண்டிருக்க சுண்டுவிரல் அளவே உள்ள இந்த வெட்டுக்கிளிகள் கடந்த 10 நாட்களாக ராஜஸ்தான் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டிருக்கின்றன.

மே மாதத் தொடக்கத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் இருந்து எல்லை தாண்டி கூட்டம் கூட்டமாக ராஜஸ்தானுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன வெட்டுக்கிளிகள். முதலில் எல்லையோர மாவட்டங்களுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது உள்மாவட்டங்களிலும் பயிர்களை தின்று தீர்க்கத் தொடங்கிவிட்டன. இலை, பூ, பழம், காய், தண்டு என பயிர்களில் எதையும் இவை விட்டுவைப்பதில்லை.

ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் 40 லட்சம் வெட்டுக்கிளிகள் வந்திறங்க முடியும். அவற்றால் ஒருநாளில் 35 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு தாவரங்களை கபளீகரம் செய்ய முடியும் என்பதுதான் மிகவும் ஆபத்தானது… இந்த வெட்டுக்கிளிகளை விரட்ட வெடி வெடிப்பது, தகரம் மற்றும் அலுமினியப் பொருட்களை தட்டி ஒலி எழுப்புவது மட்டும்தான் விவசாயிகளின் கையில் இருக்கும் வாய்ப்புகள்.

மற்றொருபுறம் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க அரசு முயற்சித்து வந்தாலும் அது ஓரளவுக்கு மேல் பயன்தரவில்லை. தீயணைப்பு வாகனங்கள் மூலமும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. விரைவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் அதற்காக மத்திய அரசிடம் 84 கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறது ராஜஸ்தான். ஆனாலும் கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் விளைந்த பயிர்களை தின்று தீர்த்த வெட்டுக்கிளிகள் இந்த ஆண்டும் அந்த அளவுக்கு சூறையாடும் என விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த 16 நூல்கள்

#ஊரடங்கு_தள்ளுபடி 7 ( வைரமுத்து )

சமகாலத்தில் வாசிப்பை நோக்கித் திரும்பும் ஒருவருக்கு, மொழி, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, காதல் என, சங்ககாலம் முதல் தற்காலம்வரை எல்லாவற்றைக் குறித்தும் ஒரு வீரியமான விதையை தனக்குள் ஊன்றிக்கொள்ளவும், அதிலிருந்து துளிர்த்து மேலெழுந்து விரிந்து கிளைபரப்பவும் துவக்கப்புள்ளியாக வைரமுத்துவை வரித்துக்கொண்ட ஒருவரால், ஒருபோதும் தமிழின் ஆழம்காணாது திரும்பமுடியாது என்பது உண்மை. 

கவிப்பேரரசு வைரமுத்துவின்
தேர்ந்தெடுத்த 16 நூல்கள் ரூ.4000, சலுகை விலையில் ரூ.3000 மட்டும்.
தமிழ்நாட்டு, புதுச்சேரிக்குள் அஞ்சல் செலவு இலவசம், தமிழ்நாட்டுக்கு வெளியே ரூ.200

1 தமிழாற்றுப்படை  (ரூ.500)
2 இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல-(ரூ.150)
3 கருவாச்சி காவியம்- (ரூ.300 )
4 கள்ளிக்காட்டு இதிகாசம் (ரூ250)
5 கவிராஜன் கதை (ரூ.130)
6 கொஞ்சம் தேனீர் நிறைய வானம் (ரூ.100)
7 சிகரங்களை நோக்கி  (ரூ.120)
8 சிற்பியே உன்னை செதுக்குகிறேன் (ரூ.80)
9 தண்ணீர் தேசம் (ரூ.200)
10 தமிழுக்கு நிறமுண்டு (ரூ.120)
11 பாற்கடல் (ரூ.150)
12 பெய்யென  பெய்யும் மழை (ரூ.150)
13 மூன்றாம் உலக போர் ( ரூ.300)
14 வைரமுத்து சிறுகதைகள்  (ரூ.350)
15 ஆயிரம் பாடல்கள் (ரூ.600)
16 வைரமுத்து கவிதைகள் (ரூ.500)

🔥 மொத்த விலை: ₹ ரூ.4000
🔥 தள்ளுபடி விலை: ₹ ரூ.3000
📴 GPay, Phone Pay 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: +𝟗𝟏 – 99404 46650
👉 𝐃𝐈𝐒𝐂𝐎𝐕𝐄𝐑𝐘 𝐁𝐎𝐎𝐊 𝐏𝐀𝐋𝐀𝐂𝐄, 𝐊𝐊 𝐍𝐚𝐠𝐚𝐫 𝐖𝐞𝐬𝐭, (𝐍𝐞𝐚𝐫 𝐏𝐨𝐧𝐝𝐢𝐜𝐡𝐞𝐫𝐫𝐲 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐇𝐨𝐮𝐬𝐞), 𝐂𝐡𝐞𝐧𝐧𝐚𝐢-𝟕𝟖.

For NEFT
KARUR VYSYA BANK
Branch : WEST K K NAGAR
Current A/c Name : Discovery Book Palace Private Limited
A/c No : 1616135000003451
IFSC Code : KVBL0001616

குறிப்பு: புத்தகங்கள் பெரும்பாலும் Professional Courier மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆர்டர் செய்தவர்கள் மறக்காமல் 9940446650 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் செய்தி அனுப்பி உறுதிபடுத்தவும்

டாக்டர் பல்ப்பு தெறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று முக்கியத் தகவல்

Dr.Padmanabhan Palpu..

"ஈழவர்கள், பொதுவாக கல்வி அறிவு இல்லாதவர்கள் என்பதால், நீங்கள்(ஈழவர்கள்),அரசு பணிகளுக்கு முயற்சி செய்யாமல், உங்கள் குலத் தொழிலான, கள் இறக்குதல், கயிறு திரிப்பது போன்ற தொழில்களை செய்வது தான் நல்லது"!


1891-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ம் தேதி, அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான மன்னன், மூலம் திருநாள் ஆட்சியின் அறிவிப்பு தான் மேற்சொன்ன வரிகள்...

சுவாமி விவேகானந்தர்/நாராயண குரு போன்றவர்களின் சம காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக போராளி தான் டாக்டர். பல்ப்பு...
திருவாங்கூர் சமஸ்தானத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகே, பேட்டை என்ற ஊரில், வசதி மிக்க ஈழவ குடும்பத்தில் பிறந்தவர் தான் டாக்டர். பல்ப்பு..

1884ம் ஆண்டு, மருத்துவ படிப்பிற்காக நுழைவுத்தேர்வு எழுதி(அந்த காலங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் படிப்புக்கு செல்வதை தடுக்க நுழைவுத்தேர்வு இருந்தது என்பது கவனிக்கத்தக்கது),தேர்வில் 4வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார் இளைஞர் பல்ப்பு; ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த ஈழவரான பல்ப்பு, மருத்துவ கல்வி பெறுவதை மறுத்தது, திருவாங்கூர் மன்னர் ஆட்சி.தனது மருத்துவ கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட பல்ப்பு, புகழ்பெற்ற Madras Medical Collegeல் சேர்ந்து தனது மருத்துவ கல்வியை தொடர்ந்து, இறுதியில் ஒரு மருத்துவராக,தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார் Dr.Palpu!
ஆனால்,டாக்டர் பல்ப்பு அவர்களுக்கு, தனது சொந்த ஊரில் மருத்துவ பணி புரியும் உரிமையை மறுத்தது, திருவாங்கூர் மன்னர் ஆட்சி...
கொந்தளித்த டாக்டர் பல்ப்பு, ஆவேசத்தை அடக்கிக்கொண்டு, மருத்துவ பணிக்காக மைசூர் சென்றார்; அங்கே அவருக்கு கிடைத்த ஒரு மாத ஊதியம் ரூபாய்100/.
அதே நேரம், திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஒரு மருத்துவருக்கு கிடைத்த ஒரு மாத ஊதியம் ரூபாய் 5(ஐந்து)மட்டுமே...
பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள அந்த வேலை அவருக்கு அந்த நேரம் தேவைப்பட்டது..
ஆனாலும், சுவாமி விவேகானந்தர் அவர்களை சந்தித்து, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஈழவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், மன்னர் ஆட்சி எப்படியெல்லாம் இழிவு படுத்தி வருகிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.. சுவாமி விவேகானந்தரின் ஆலோசனையின் பேரில், நாராயண குருவையும் சந்தித்து, பின்னர் களத்தில் இறங்கினார் டாக்டர். பல்ப்பு...
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதாவை சந்தித்து, அவரிடமிருந்து ஒரு அறிமுக கடிதத்தை பெற்று,G.P.Pillai என்ற பாரிஸ்டரை,லண்டனுக்கு அனுப்பி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், திருவாங்கூர் ஆட்சியின் அவலங்கள் குறித்தும், ஈழவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முயற்சி செய்தார்..
ஒரு கட்டத்தில், டாக்டர். பல்ப்பு அவர்கள்,பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான, தாதாபாய் நவ்ரோஜியை லண்டனில் சந்தித்து,பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், கேள்வி எழுப்பச் செய்தார்!
இதற்கிடையில்,1903ம் ஆண்டு, Sree Narayana Dharma Paripalana (SNDP) Yogam என்ற ஈழவர்களுக்கான ஒரு புகழ்பெற்ற அமைப்பையும் நிறுவினார்...
டாக்டர் பல்ப்பு அவர்கள் எழுதி வெளியிட்ட"Treatment of Thiyas in Travancore"என்ற ஆங்கில நூல், ஒடுக்கப்பட்ட மக்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் என்னென்ன கொடுமைகளை நேரிட்டனர் என்பவற்றையும், மன்னர் ஆட்சியின் அக்கிரமங்களையும், இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் வகையில், மிகச்சிறந்த ஆவணமாக திகழ்கிறது...
Malayali Memorial என்ற பெயரில் அப்போது மன்னர் ஆட்சிக்கு அளித்த மனுக்கள் புகழ் பெற்றவை...
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை மற்றும், அரசுப்பணி பெறும் உரிமைகளையும் பெறுவதற்காக,
13,176 பேர் கையெழுத்திட்ட Eazhava Memorial என்ற கோரிக்கை சாசனத்தில் மூன்றாவதாக,டாக்டர் பல்ப்பு கையெழுத்திட்ட,கோரிக்களுக்கு பதிலாகவே, திருவாங்கூர் மன்னனின் ஆட்சி, பதிவின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளைக் குறிப்பிட்டுள்ளது...
தனது சொத்துக்களையும், ஈட்டிய செல்வம் அனைத்தையும், தனது மனைவியின் சொத்துக்கள்அனைத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செலவு செய்த டாக்டர் பல்ப்பு, இந்திய நாடு, ஒரு குடியரசாக மாறுவதற்கு முந்தைய நாள்,
1950,ஜனவரி மாதம் 25ம் தேதி காலமானார்..
திருவாங்கூர் சமஸ்தானத்தின் கொடிய ஆட்சிக்கு எதிராக களமாடிய,ஈழவர்களுக்காக மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் களமாடிய, டாக்டர். பல்ப்பு, வரலாற்றில் உரிய இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.....

*இது ஒரு முன்னோட்டம் மட்டுமே..
**விரிவாக, அடுத்தடுத்து வரும் பதிவுகளில்.. நன்றி சாகுல் 

நம் பயன்பாட்டில் இருந்த சில நெல் வகைகள்...


1. அரியான்
2. அரியநாகன்
3. அரிக்கிராதி
4. அதிக்கிராதி
5. அச்சதித்தவன்
6. அரைச்சம்பா
7. அறுபதாம் குறுவை
8. அறுவதாங் கொடை
9. அறுபதுக்கு இருபது
10. அடுக்குச்சம்பா
11. அழகுச்சம்பா
12. அழகிய மணவாளன்
13. அன்னமழகி
14. அன்னச் சம்பா
15.அன்னதாளி
16.அம்பலவாணன்
17. ஆனைக் கொம்பன்
18. ஆனைக்கோடன்
19. ஆனைக் கொம்பு சம்பா
20. இடையபட்டிச்சம்பா
21. இலுப்பைப்பூ சம்பா
22. இரவாரி
23. இரங்கல் மீட்டான்
24. இரங்கஞ்சம்பா
25. இராச பாலன்
26. இராச வாணன்
27. இராமபாணம்
28. இருமிளகி
29. ஈர்க்குச்சம்பா
30. ஈசர்கோவை
31. உவர்முண்டான்
32. ஊசிச்சம்பா
33. ஒட்டடையான்
34. ககைச்சம்பா
35. கசப்புச்சார்
36. கடப்புவரகு
37. கடப்புக்கார்
38. கட்டச்சம்பா
39. கடுகுச் சம்பா
40. கடுக்கன் பரிபாலன்
41. கப்பக்கார்
42. கரியணிக்கட்டி
43. கருஞ்சூரை
44. கருங்கூரை
45. கருங்குறுவை
46. கருங்குருனா
47. கண்ணகி
48. கண்ணாடிக் கூத்தன்
49. கண்ணாடிச் சாத்தான்
50. கதலி வாழை
51. கத்தன்
52. கத்தூரி
53. கத்தூரிவாணன்
54. கருவாலன்
55. கருவாலன் சம்பா
56. கருணா
57. கருடன் சம்பா
58. கம்பன் சம்பா
59. கம்பஞ்சம்பா
60. கம்மஞ்சம்பா
61. கருணைவாரி
62. கருமணல்வாரி
63. கருத்த நெல்
64. கருப்பு அரிசி நெல்
65. கருப்புக் கவுனி
66. கருப்புக்காலி
67. கற்பூரவாடை
68. கற்பூரப்பானை
69.கறுப்பாலி
70. கல்லுண்டை
71. கல்லுருண்டை
72. கல்லுண்டைச் சம்பா
73. கலியன் சம்பா
74. கலியுகராமன்
75. கள்ளிமடையான்
76. களர் சம்பா
77. களர் பாலை
78. கட்டைவாலன்
79. காட்டுப் பொன்னி
80. காட்டுயானம்
81. காடைக் கழுத்தன்
82. காடைக்கன்னி
83. காடைச்சம்பா
84. காச்சம்பா
85. கார்
86. கார்குருகை
87. கார்த்தியசம்பா
88. காளான்சம்பா
89. காலா நமக்
90. காலிங்கராமன்
91. கிச்சலி சம்பா
92. குழவாழை
93. குடவாழை
94. குலைவாழை
95. குளவாழை
96. குண்டுச்சம்பா
97. குண்டைச் சம்பா
98. குதிரைவால் சம்பா
99. குதிரை வாலன்
100. குத்தாரி
101. குருவிக்கார்
102. குழியடித்தான்
103. குளித்தான்
104. குள்ளக்கார்
105. குற்றாலன்
106. குறக்குரு கண்ணன்
107. குறுஞ்சம்பா
108. குரும்பை
109. குருவை நெல்
110. குடும்பை
111. குறுவை
112. குறுவைக் கிள்ளை
113. குறுவைக் களஞ்சியம்
114. குருவைக் கலையான்
115. குறுவைச் சர்க்கரை வண்ணன்
116. குன்றிமணிச்சம்பா
117. குட்டாடை
118. குட்டைச் சிவப்பன்
119. குங்குமச்சம்பா
120. குங்குப் பாவை
121. குங்கும வெள்ளை
122. கூம்பாளை
123. கூம்வாளை
124. கூகைச்சம்பா
125. கைவரைச்சம்பா
126. கொக்கு நிறுத்துய்ய சம்பா
127. கொசும்பா நெல்
128. கொம்பாளை
129. கொடைக் கழகன்
130. கோடைச்சம்பா
131. கோரைச்சம்பா
132. கோதண்டராமன்
133. கோதுமைச் சம்பா
134. கொடைக் கழகன்
135. கோதும்பை
136. கைவிதைச் சம்பா
137. சங்கர வண்ணன்
138. சடமிளகி
139. சடைக்கார்
140. சண்டி கார்
141. சம்பா மோசனம்
142. சம்பா முத்து
143. சம்பா
144. கொடைக் கழகன்
145. சன்னச் சம்பா
146. சன்னப் பூம்பாளை
147. சலகண்டன்
148. சாலி
149. சமுத்திரம்
150. சிங்கினிகார்
151. சித்திரக்காரி
152. சித்திரக்காளி
153. சித்திரை கார்
154. சித்திரை கார் (பாண்டி)
155. சிறுமணியன்
156. சிறு நாகராசன்
157. சிறுபேரா வண்ணன்
158. சிறுகுறுவையிடைக்காட்டான்
159. சிறை மீட்டான்
160. சிவப்பு சித்திரை கார்
161. சிவப்புக் கவுணி
162. சின்னச் சம்பா
163. சின்ன வாலன்
164. சின்ன அறுபதாங் கோடை
165. சின்னட்டிச்சம்பா
166. சிதாபோக நெல்
167. சீதாபோகம்
168. சீத்தா வல்லிக் குறுவை
169. சீரகச் சம்பா
170. சீராமபாணம்
171. சுருணைவாலன்
172. சுந்தர புழுகுச்சம்பா
173. சூரன் குறுவை
174. சூலை குறுவை
175. சூரியச் சம்பா
176. சூடகச் சம்பா
177. செங்கல்பட்டு
178. செங்கல்பட்டு சிறுமணி
179. செங்குறுவை
180. செஞ்சாலி
181. செஞ்சம்பா
182. செந்நெல்
183. செந்தாழை நெல்
184. செவ்வாழை
185. செவ்வாழன்
186. செம்மிளகி
187. செம்மழகி
188. செம்பாளை
189. செம்பிலிபிரியன்
190. செல்லச் சம்பா
191. செழும்பனை முகரி
192. செருக்குரும்பை
193. சொரணாலி
194. சொரி குரும்பை
195. சொர்ணமசூரி
196. சொல்லச்சம்பா
197. தங்க அரிசி நெல்
198. தானச் சம்பா
199. தங்கச் சம்பா
200. தம்பான்
201. திருப்பதிசாரம்
202. திருவரங்க செந்நெல்
203. திருமங்கையாழ்வான்
204. தில்லைக் கூத்தன்
205. தில்லை நாயகன்
206. துரை வாணன்
207. தூயமல்லி
208. தெக்கலூர் சம்பா
209. தேவன் சம்பா
210. தேங்காய்ப்பூ சம்பா
211. தொப்பிச்சம்பா
212. தோட்டஞ்சம்பா
213. நவரை
214. நற்பொசும்பா
215. நாராயணன் நெல்
216. நீலஞ்சம்பா
217. நூற்றிப் பத்து
218. நெய் கிச்சி
219. நெடு மூக்கன்
220. நெல்லன் சம்பா
221. நொறுங்கன்
222. பக்கிரி சம்பா
223. பனங்காட்டு குடவாழை
224. பனை முகரன்
225. பனை முகத்தான்
226. பவளச்சம்பா
227. பச்சை வண்ணன்
228. பச்சை நாயகன்
229. பரிமள ராமன்
230. பண்ணாடி காத்தான்
231. பத்தன்
232. பள்ளிகொண்டான்
233. பன்றிக்கூரன்
234. பாளை முகன்
235. பானை முகன்
236. பாற் கடுக்கன்
237. பாரக் கருக்கன்
238. பாலுக்கினியான்
239. பிச்சாவரை
240. பிசினி
241. பிறங்கலமிட்டான்
242. பிரியாணிச்சம்பா
243. புத்தன் வாரி
244. புருகு சீரகச்சம்பா
245. புளுகு சீரகச்சம்பா
246. புழுகுச்சம்பா
247. புனுகுச்சம்பா
248. புழுதிக்கார்
249. புழுதிபிரட்டி
250. புன்னைவனச் சம்பா
251. புன்னைப்பூச் சம்பா
252. பூபாலை பாலன்
253. பூஞ்சாலி
254. பூசைப்பாடி
255. பூங்கார்
256. பூவஞ்சம்பா
257. பூவானிசம்பா
258. பெரிய அறுபதாங் கோடை
259. பெருங்கார்
260. பெருவெள்ளம்
261. பெங்களூர் சம்பா
262. பொய்கைச் சம்பா
263. பொட்டி சம்பா
264. பொற்காளி
265. சொக்கநாதன்
266. பொற்பாளை
267. பொன்னாயகன்
268. மங்கலச் சம்பா
269.  மங்கலப் பிச்சை
270. மதுரவேலி
271. மணக்கொத்தன்
272. மணக்கத்தை
273. மணவாளன்
274. மணல்வாரி
275. மணவாரிவாலன்
276. மச்சு முறித்தான்
277. மணிச்சம்பா
278. மட்டை கார்
279. மரநெல்
280. மருவில்லி
281. மலைமுண்டான்
282. மதுரவேலி
283. மல்லி
284. மல்லிகை
285. மல்லிகைச்சம்பா
286. மல்லியப் பூசம்பா
287. மாணிக்கமாலை
288. மாலை புத்தன்
289. மாப்பிள்ளைச் சம்பா
290. மிளகுச் சம்பா
291. மின்னல் சம்பா
292. முக்கண்
293. முண்டன்
294. முட்டைக்கார்
295. முத்து வெள்ளை
296. முத்து விளக்கி
297. முத்துச் சம்பா
298. முத்து வண்ணச் சம்பா
299. முக்காச்சம்பா
300. முடுவு முழுங்கி
301. முருங்கைக் கார்
302. முள்ளுக் குறுவை
303. முளை நெடுமூக்கன்
304. முனை நெடுமூக்கன்
305. முல்லைச் சம்பா
306. மூங்கில்சம்பா
307. மேகத்திரை கொண்டான்
308. மைச்சம்பா
309. மைசூர் மல்லி
310. மொட்டைச் சம்பா
311. மொட்டைக் குறுவை
312. யானைமுகன்
313. வங்கி
314. வரகஞ்சம்பா
315. வரப்புக் குடைஞ்சான்
316. வரியான்
317. வர்ண பொற்பாளை
318. வல்லளராயன்
319. வண்டாளை
320. வளைதடிச்சம்பா
321. வனச்சம்பா
322. வாசனை சீரகச்சம்பா
323. வாடை
324. வாடன் சம்பா
325. வால் சிவப்பு
326. வாரிநெல்
327. வாலான்
328. வாலன் நெடுமூக்கன்
329. விங்கிநாராயணன்
330. வீதிவிடங்கன்
331. விஷ்ணுபோகம்
332. வெந்தயச் சம்பான்
333. வெள்ளை குறுவை கார்
334. வெள்ளைப்பொன்னி
335. வெள்ளை மலை
336. வெள்ளை
வெம்பா
337.வைகுண்டா

*(இன்னும் நம் பாரம்பரிய ரகங்கள் நிறைய இருக்கிறது.. அதற்கான தேடலும் தொடர்கிறது.. அறிந்தோர் பதிவிடுக....)*

நன்றி உழவர் குடி

மண்பானையின் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்...


வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும்போது
மண்பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு
குளிரச் செய்யும்.



*வெளிப்புறத்தில் வெயில் குறைவாக இருந்தால்
மண்பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே
குளிர்ந்து இருக்கும்.

*கடும் கோடையில் உடலுக்கு இதமாக, ஒரு மண்
பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக்கிறது
என்றால் அது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!?

*மண்பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள்தான்.

*மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே
இருக்கின்றன. நீர் வைக்கப்பட்டிருக்கும் மண்
பானைகளின் வெளியே முத்து முத்தாய்
வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள்
இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

*மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள்
வழியேதான் இப்படி நீர் கசிகிறது.
இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே
இருக்கிறது. இப்படி பானையின் வெப்பமும்,
பானையின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள
வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம்
வெளியேற்றப்படுகிறது. எனவே நீர் குளிர்ந்த
நிலையிலேயே இருக்கிறது.

*வெளிப்புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும்,
நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.
பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம்
அதிகமாக இருந்தால், அதிக வெப்பத்தின் காரணமாக
நீர் ஆவியாவதும் அதிக அளவில் நடைபெறுகிறது.
ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப்படுவதால்
பானைக்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சியாக
மாறுகிறது.

*பனிக் காலத்திலும், மேலைக்காற்று வீசும் காலத்திலும்
காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும். காற்று
ஜில்லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும்
இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவியாகும் அளவு
குறைகிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த
அளவே குளிர்ச்சி அடைகிறது.

* இதற்காக மண்பானையில் நீண்ட நேரம் நீரை
வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி
ஆகிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடியாகப் பற்களை
நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு மண்பானை தண்ணீரை
குளிர்விக்காது.

*ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை குளிர்விக்கும்
என்று கேட்டால், அறை வெப்பநிலையைவிட வெறும்
5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவுக்குத்தான்
குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம் 30 டிகிரி
செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின்
வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா??


சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.



இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

#சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

#முகப்பருக்கள்_குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

#மேனி_பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

#எலும்பு_பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

#நினைவாற்றல்_அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

* சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

*இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

* பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

* பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

* சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

* காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

* சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.

* தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது..!!

நன்றி உழவர் குடி

ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்யலாம்?

இன்றைய டெக் உலகில் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவரே இல்லை. அத்தகைய அத்தியாவசிய ஸ்மார்ட்போன்கள் கைதவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?

வாரெண்டி க்ளைய்ம் செய்யலாம்:
---------------------------------------------------------
எல்லா ஸ்மார்ட்போன்களும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருவதில்லை. அந்த வசதி இல்லாத ஸ்மார்ட்போன்கள் நீரில் விழுந்துவிட்டால், அந்த போன் உரிமையாளரின் பாடு திண்டாட்டம்தான். இன்று மார்க்கெட்டில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்து விட்டால் வாரண்டி பெற்றுக்கொள்ளாலாம் என்கிற ரீதியில்தான் விற்கப்படுகின்றன. அது ஒரு விபத்தாகக் கருதப்படும் சூழலில் வாரண்டியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கூடுதல் வார்த்தை உங்கள் ஸ்மார்ட் போன் வாரண்டி ஒப்பந்தத்தில் இருக்கும் பட்சத்தில், இது சாத்தியம். இந்த ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில், வாரண்ட்டி கிளைம் செய்ய
தண்ணீரில் விழுந்தை மறைக்க முயற்சிக்காதீர்கள். ஏனென்றால், தண்ணீரில் மூழ்கிவிட்டால் நிறம் மாறும் சென்சார்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும். கண்டு பிடித்து விடுவார்கள்.

உடனடியாக செயல்படுங்கள்: 
--------------------------------------------------
தண்ணீரில் மூழ்கிய ஸ்மார்ட்போனை உடனடியாக அணைத்து அதிலிருந்து பேட்டரி, மெமரி கார்டு மற்றும் சிம் கார்டை
உடனடியாக அகற்றி விடுங்கள். அந்த பாகங்களில் இருந்து தண்ணீரை சுத்தமான துணி கொண்டு துடைத்து விடுங்கள். ஸ்மார்ட்போனில் இயர்போன், கேபிள் என ஏதேனும் இணைக்கப்பட்டிருந்தால், அதையும் உடனடியாக துண்டித்து விடுங்கள். ஹேர் ட்ரையர் கொண்டு உங்கள் ஸ்மார்ட்போனை உலர்த்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் ஹேர் ட்ரையரிலிருந்து வெளிவரும் வெப்பத்தின் அளவு அதிகம் என்பதால், ஸ்மார்ட்போன்கள் பாதிக்கப்பட  வாய்ப்பு அதிகம்.

நன்னீர் வேறு, கடல்நீர் வேறு:
-------------------------------------------------
நன்னீரில் விழும் ஸ்மார்ட்போன்களை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர வாய்ப்பு உண்டு. ஆனால், உப்புத் தன்மை அதிகம் கொண்ட கடல் நீரில் விழும் ஸ்மார்ட்போன்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஸ்மார்ட் போன்களின் மெட்டல் பாகங்கள் மற்றும் எலெக்ரானிக்ஸ் பாகங்கள் கடல்நீரில் இருக்கும் உப்புத் தன்மையால் பாதிக்கப்படும்.

ஸ்மார்ட்போன் ஆன் ஆகிவிட்டால் பிரச்னை தீர்ந்தது:
-----------------------------------------------------------------------------------
தண்ணீரில் விழுந்த உங்கள் ஸ்மார்ட்போன் மீண்டும் இயக்கத்துக்கு வந்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது என்று பொருள்.
எதற்கும் ஒரு பாதுகாப்புக்கு ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியத் தகவல்களை உடனடியாக வேறு ஒரு ஸ்மார்ட் போனுக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றி விடுங்கள்.
Source: puthiyathalaimurai 18 Jul, 2017
------------------------------------------------

துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!

பசிக்குத்தான் சாப்பிட வந்தேன் திருடி வசதியாக வாழ வரவில்லை கனவுவிலும் நினைக்கவில்லை அன்னதானம் செய்து புண்ணியம் தேட நினைக்கும் மனிதன் இப்படி கொல்லுவான் என்று...!!!



எதிரி பூனையை அறிவேன்...
துரோகி மனிதன் என்று அறியவில்லை..!!!


ஊராட்சியில் உள்ள மொத்த வங்கி கணக்குகளின் விபரம்.


1. கிராம ஊராட்சி நிதி கணக்கு

2. தமிழ்நாடு மின்சார வாரியம்/தமிழ்நாடு வடிகால் வாரியம்/மாவட்ட ஆட்சியர் கொடுப்பு கணக்கு

3. கிராம ஊராட்சி மத்திய திட்ட நிதி கணக்கு

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி கணக்கு

5. மாநில நிதி கணக்கு

6. முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட கணக்கு

7. கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதிய கணக்கு

8. கிராம ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட கணக்கு

9. கிராம ஊராட்சி மத்திய நிதி குழு மானியத் திட்டம் கணக்கு...

நன்றி radha.

WhatsApp வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில் சேமிக்கப்படமாட்டாது

🎤 *அட்மின்கள் அறிவிப்பு பயனுள்ள தகவல்*

*இனி யாரும் குரூப்பிலிருந்து  வெளியேற வேண்டாம் நன்றி*
வாட்ஸ்அப் மூலம் நிறைய வீடியோக்கள் மற்றும் படங்கள் நமது போனில் டவுன் லோட் ஆவதால் மொபைல் கலரி நிரம்பி சிரமம் அடைகின்றோம், இதனால் இவற்றை அடிக்கடி அழிக்க வேண்டியுள்ளது.

கவலையை விடுங்கள்.
😊😊

இதைத் தவிர்க்க வாட்ஸ்அப்பில் குரூப் செயற்பாட்டுக்கு மாத்திரம் ஒரு  அம்சம்  உள்ளது, அதன் மூலம் படங்களையும், வீடியோக்களையும் மொபைல் கலரியில் சேவ் ஆகாமல் *குரூப்பில் மட்டுமே* பார்க்கலாம்.

 *செயற்படுத்தும் படிமுறை.*

◆ குரூப்பில் வலது மேல் பக்க மூலையில் தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும்.

◆ பின்பு *GROUP INFO* வை அழுத்தவும்.

◆ அப்போது மூன்று தெரிவுகளைக் காண்பீர்கள்.

01. *Mute Notification*
02. *Custom*
03. *Media Visibility*

இதில் *Media Visibility* ஐ அழுத்தவும்,

அதில்
 *Default*
 *Yes*
 *No*
என்று காணப்படும், அதில் *No* வை அழுத்தி பின்னர் *Ok* பண்ணவும்.

இப்போது வீடியோக்கள் & படங்கள் மொபைல் கலரியில்  சேமிக்கப்படமாட்டாது மாறாக உங்கள் குழுவில் மட்டுமே தெரியும்.

 *நன்றி* WhatsApp 

நுட்பவியல் கலைச் சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

⭕ WhatsApp      -       புலனம்
⭕ youtube          -       வலையொளி
⭕ Instagram       -       படவரி
⭕ WeChat          -        அளாவி
⭕ Messanger     -        பற்றியம்
⭕Twtter              -         கீச்சகம்
⭕ Telegram        -         தொலைவரி
⭕ skype             -          காயலை
⭕Bluetooth       -          ஊடலை
⭕ WiFi             -          அருகலை 
⭕ Hotspot        -          பகிரலை
⭕ Broadband  -        ஆலலை
⭕ Online           -         இயங்கலை
⭕ Offline            -        முடக்கலை
⭕ Thumbdrive   -        விரலி
⭕ Hard disk       -        வன்தட்டு
⭕ GPS                -        தடங்காட்டி
⭕ cctv                 -        மறைகாணி
⭕ OCR              -         எழுத்துணரி
⭕ LED              -         ஒளிர்விமுனை 
⭕ 3D                  -        முத்திரட்சி
⭕ 2D                 -         இருதிரட்சி
⭕ Projector       -        ஒளிவீச்சி
⭕ printer          -        அச்சுப்பொறி
⭕ scanner         -        வருடி
⭕ smart phone  -       திறன்பேசி
⭕ Simcard          -       செறிவட்டை
⭕ Charger          -        மின்னூக்கி
⭕ Digital             -         எண்மின்
⭕ Cyber            -          மின்வெளி
⭕ Router           -         திசைவி
⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
⭕ Thumbnail              சிறுபடம்
⭕ Meme           -         போன்மி
⭕ Print Screen -          திரைப் பிடிப்பு
⭕ Inkjet             -           மைவீச்சு
⭕ Laser            -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .

- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும்
பகிரலாம் -
வாழ்க வளமுடன்...

நன்றி எழதியவருக்கு. 

கொரோனா செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள்?!

#வேலை_இழந்தோர்_பலர்...*

#நிம்மதி_இழந்தோர்_பலர்...*

*வாழ்வாதாரத்தை இழந்து வீட்டு வாடகை கொடுக்க இயலாதவர்கள் பலர்...*

*பசி, பட்டினியால் உயிர் இழந்தவர்கள் பலர்...*

*தன்னுடைய தாய், தகப்பன் இறப்பிற்கு கூட செல்ல இயலாத வெளிநாட்டு வாழ்க்கை...*

*"அன்றாடம் கூலி வேலை செய்தால்தான் சாப்பிட முடியும்" என்ற நிலையில் உள்ளவர்களில் கதியோ...*

*அவர்களின் சோகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது...*

*மனைவி மக்களை பிரிந்து வாடும் ஆண்மகனின் வளைகுடா வாழ்க்கையோ!? செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கிறான்...*

*செயற்கை என்கிறார்கள், இயற்கை என்கிறார்கள், சீனாவின் சதி என்கிறார்கள், அதில் உள்ள மர்மங்கள் என்ன? அவிழ்க்கப்படாத ரகசியங்கள் என்ன?*

*சேமிப்பும் இல்லை, வேலையும் இல்லை, ஊரடங்கினால் ஊனமானவர்கள் ஏராளம் ஏராளம்...*

*விண்ணை முட்டிய வளர்ச்சி என்றார்கள், வல்லரசுகளின் ராஜ்யம் என்றார்கள், உன் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியாமல் உன்னை தடுத்தது எது?*

*உன் ஆணவமும், அகந்தையும், பகட்டும், வெற்று பெருமையும் சுக்கு நூறாக்கப்பட்டதன் காரணம் என்ன?*

*மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களினால் வீழ்ந்தது மனித நேயம் மட்டுமல்ல...சகோதரத்துவம், சமத்துவமும் தான்...*

*யாரை நம்புவது? புகழிடம் தேடி எங்கே அலைவது? சரியான பாதையை, தீர்வை தருவது யார்?*

*நோய்க்கான நிவாரணம் இல்லாமல் நோயை இறக்குவது இல்லை என்பதன் உண்மை நிலை என்ன?*

அனைத்திற்கும் ஒரே பதில் நம்மை படைத்த நாயனிடம் சரணாகதி அடைவோம்!

*கைகளை உயர்த்தி கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டான் என்பதில் ஆழமான நம்பிக்கை வைப்போம்*

*நம்முடைய ஆடை, உணவுகள், வருமானம் அனைத்தும் யாரையும் ஏமாற்றாமல், யாரையும் வஞ்சிக்காமல் இறை பொருத்தத்தோடு வருகிறதா? என்பதை சுய பரிசோதனை செய்வோம்!*

*"திரை மறைவில் உள்ள உன் சகோதரனுக்காக நீ பிராத்தித்தால் உனக்கும் அதுபோல் கிடைக்கும்" என்பதில் அதிகமதிகம் ஆர்வம் கொள்வோம்*

இறுதியாக நாம் பலகீனமானவர்கள், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளங்கி முக்காலத்தை அறிந்த ஏக இறைவனிடம் இருகரமேந்தி அசைக்க முடியாத உறுதியுடன் நம்முடைய பிரார்த்தனைகளை வைப்போம்...

*பிரார்த்தனையின் வலிமை லேசானது அல்ல...*

நம்முடைய நேரங்களை ஒதுக்கி நம்முடைய கோரிக்கைகளை வைப்போம்

*"கலப்பற்ற முறையில் பாவமன்னிப்பு கேளுங்கள் - அல்குர்ஆன்*

வேளாண்மை செய்திகள் - பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.


1. அகச்சுரப்பியியல் – Endocrinology
2. அடிசிலியல் – Aristology
3. அடையாளவியல் – Symbology
4. அண்டவியல் – Universology
5. அண்டவியல் – Cosmology
6. அணலியல் – Pogonology
7. அருங்காட்சியியல் – Museology
8. அருளரியல் – Hagiology
9. அளவீட்டியல் – Metrology
10. அற்புதவியல் – Aretalogy
11. ஆடவர் நோயியல் – Andrology
12. ஆய்வு வினையியல் – Sakanology
13. ஆவணவியல் – Anagraphy
14. ஆவியியல் – Spectrology
15. ஆறுகளியல் – Potamology
16. இசையியல் – Musicology
17. இந்தியவியல் – Indology
18. இயற்பியல் – Physics
19. இரைப்பையியல் – Gastrology
20. இலக்கிலி இயல் – Dysteleology
21. இறை எதிர் இயல் – Atheology
22. இறைமையியல் – Pistology
23. இறைமையியல் – Theology
24. இன உறுப்பியல் – Aedoeology
25. இன்ப துன்பவியல் – Algedonics
26. இனப் பண்பாட்டியல் – Ethnology
27. இனவியல் – Raciology
28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology
29. உடலியல் – Physiology
30. உடற் பண்டுவஇயல் – Phytogeography
31. உடற்பண்பியல் – Somatology
32. உடுவியக்கவியல் – Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் – electro biology
35. உயிர்ப்படிமவியல் – Paleontology
36. உயிர்ப்பொருளியல் – Physiology
37. உயிர்மியியல் – Cytology
38. உயிரித் தொகை மரபியல் – Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் –
...................... .......................... Population Dynamics
40. உயிரிய இயற்பியல் – Biophysics

41. உயிரிய மின்னணுவியல் – Bioelectronics
42. உயிரிய வேதியியல் – Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் – ..........................................Biochemical taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் – Biotechnology
45. உயிரியப் பொறியியல் – Bioengineering
46. உயிரியல் – Biology
47. உயிரினக் காலவியல் – Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் – Bioecology
49. உருவகவியல் – Tropology
50. உருள்புழுவியல் – Nematology
51. உரைவிளக்கியல் – Dittology
52. உளவியல் – Psychology
53. ஊட்டவியல் – Trophology
54. எகிப்தியல் – Egyptology
55. எண்கணியியல் – Numerology
56. எரிமலையியல் – Volconology
57. எலும்பியல் – Osteology
58. எலும்பு நோய் இயல் – Osteo pathology
59. எறும்பியல் – Myrmecology
60. ஒட்பவியல் – Pantology
61. ஒப்பனையியல் – Cosmetology
62. ஒலியியல் – Phonology
63. ஒவ்வாமை இயல் – Allergology
64. ஒழுக்கவியல் – Ethics
65. ஒளி அளவை இயல் – Photometry
66. ஒளி இயல் – Photology
67. ஒளி உயிரியல் – Photobiology
68. ஒளி விளைவியல் – Actinology
69. ஒளி வேதியியல் – Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் – Photozincography
71. ஓசையியல் – Acoustics
72. கசிவியல் – Eccrinology
73. கட்டடச்சூழலியல் – Arcology
74. கடப்பாட்டியல் – Deontology
75. கடல் உயிரியல் – Marine biology
76. கடற் பாசியியல் – Algology
77. கண்ணியல் – Opthalmology
78. கணிப்பியல் – Astrology
79. கதிர் மண்டிலவியல் – Astrogeology
80. கதிர் விளைவியல் – Actinobiology

81. கரிசியல் – Hamartiology
82. கரிம வேதியியல் – Organic Chemistry
83. கருத்தியல் – Ideology
84. கருதுகை விலங்கியல் – Cryptozoology
85. கருவியல் – Embryology
86. கருவியல் – Embryology
87. கல்வி உளவியல் – Educational Psychology
88. கலைச்சொல்லியல் – Terminology
89. கழிவியல் – Garbology
90. கனி வளர்ப்பியல் – Pomology
91. கனிம வேதியியல் – inorganic chemistry
92. கனியியல் – Carpology
93. கனியியல் – Pomology
94. காளானியல் – Mycology
95. காற்றழுத்தவியல் – Aerostatics
96. காற்றியக்கவியல் – Aerodynamics
97. காற்றியல் – Anemology
98. கிறித்துவியல் – Christology
99. குடல் புழுவியல் – Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் – Haematology / Hematology
102. குளுமையியல் – Cryology
103. குற்றவியல் – Criminology
104. குறிசொல்லியல் – Parapsychology
105. குறிப்பியல் – Cryptology
106. குறியீட்டியல் – Iconology
107. கெல்டிக் சடங்கியல் – Druidology
108. கேட்பியல் – Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் /
 .................... சைகையியல்) -Pasimology
110. கையெழுத்தியல் – Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் – Archology
113. கோளியல் – Uranology
114. சங்குஇயல் – Conchology
115. சமயவிழாவியல் – Heortology
116. சரி தவறு ஆய்வியல் – Alethiology
117. சாணவியல் – Scatology
118. சிலந்தி இயல் – Araneology
119. சிலந்தியியல் – Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் – Onomatology

121. சீனவியல் – Sinology
122. சுரப்பியியல் – Adenology
123. சூழ் வளர் பூவியல் – Anthoecology
124. சூழ்நிலையியல் – Ecology
125. செதுக்கியல் – Anaglyptics
126. செய்கை இயல் – Dactylology
127. செல்வ வியல் – Aphnology
128. செல்வவியல் – Plutology
129. செவ்வாயியல் – Areology
130. செவியியல் – Otology
131. சொல்லியல் – Lexicology
132. சொல்லியல் – Accidence
133. சொற்பொருளியல் – Semasiology
134. தசையியல் – Myology
135. தண்டனையியல் – Penology
136. தமிழியல் – Tamilology
137. தன்மையியல் – Axiology
138. தன்னியல் – Autology
139. தாவர உள்ளியல் – Phytotomy
140. தாவர நோய் இயல் – Phytopathology
141. தாவர வரைவியல் – Phytography
142. தாவரஊட்டவியல் – Agrobiology
143. தாவரவியல் – Botany
144. திணைத் தாவர இயல் – Floristics
145. திணையியல் – Geomorphology
146. திமிங்கில இயல் – Cetology
147. திருமறைக் குறியீட்டியல் – Typology
148. திருமனையியல் – Naology
149. திரைப்படவியல் – Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் – Particle physics
152. துகளியல் – Koniology
153. துதிப்பாவியல் – Hymnology
154. துயிலியல் – Hypnology
155. தூய இலக்கியல் – Heirology
156. தூள்மாழை இயல் – Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் – Angelology
159. தேவாலயவியல் – Ecclesiology
160. தேனீ இயல் – Apiology

161. தொடர்பிலியியல் – Phenomenology
162. தொண்டை இயல் – Pharyngology
163. தொல் அசீரியர் இயல் – Assyriology
164. தொல் உயிரியல் – Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் – Paleo ecology
166. தொல் பயிரியல் – Paleobotany
167. தொல் மாந்தவியல் – Paleoethnology
168. தொல் மீனியல் – Paleoichthylogy
169. தொல் விலங்கியல் – Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த –
மாந்தக்குரங்கினவியல்) – Anthropobiology
171. தொல்லிசையியல் – Ethnomusicology
172. தொல்லியல் – Archaeology
173. தொல்லினவியல் – Paleethnology
174. தொல்லெச்சவியல் – Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் – Orismology
176. தொழில் நுட்பவியல் – Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் – industrial chemistry
178. தொழு நோயியல் – Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் – Pestology
180. தொன்மவியல் – Mythology
181. தோட்டுயிரியியல் – Astacology
182. தோல்நோயியல் – Dermatology
183. நச்சியியல் – Virology
184. நடத்தையியல் – Praxeology
185. நரம்பியல் – Neurology
186. நல்லுயிரியல் – Pneumatology
187. நலிவியல் – Astheniology
188. நன்னியல் – Agathology
189. நாடி இயல் – Arteriology
190. நாணயவியல் – Numismatology
191. நாளவியல் – Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் – Hydrogeology
194. நிலநடுக்கவியல் – Seismology
195. நிலாவியல் – Selenology
196. நிலை நீரியல் – Hydrostatics
197. நீத்தாரியல் – Martyrology
198. நீர் வளர்ப்பியல் – Hydroponics
199. நீர்நிலைகளியல் – Limnology
200. நீராடல் இயல் – Balneology

201. நுண் உயிரியல் – Microbiology
202. நுண் வேதியியல் – Microchemistry
203. நுண்பொருளியல் – Micrology
204. நுண்மி இயல் – Bacteriology
205. நுண்மின் அணுவியல் – Micro-electronics
206. நூல் வகை இயல் – Bibliology
207. நெஞ்சக வியல் – Cardiology
208. நெடுங்கணக்கியல் – Alphabetology
209. நெறிமுறையியல் – Aretaics
210. நொதி இயல் – Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் – Enzyme tecnology
212. நோய் இயல் – Pathology
213. நோய்க்காரணவியல் – Aetiology
214. நோய்க்குறியியல் – Symptomatology
215. நோய்த்தடுப்பியல் – Immunology
216. நோய்த்தீர்வியல் – acology
217. நோய்நீக்கியல் – Aceology
218. நோய்வகையியல் – Nosology
219. நோயாய்வியல் – Etiology
220. நோயியல் – Pathology
221. படஎழுத்தியல் – Hieroglyphology
222. படிகவியல் – crystallography
223. பணிச்சூழ் இயல் – Ergonomics
224. பத்தியவியல் – Sitology
225. பயிர் மண்ணியல் – Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் – Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் – kinematics
229. பருவ இயல் – Phenology
230. பருவப் பெயர்வியல் – Phenology
231. பல்லியல் – Odontology
232. பழங்குடி வழக்கியல் – Agriology
233. பழம்பொருளியல் – Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் – Contrology
235. பறவை நோக்கியல் – Ornithoscopy
236. பறவையியல் – Paleornithology
237. பனிப்பாளவியல் – Glaciology
238. பாசி இயல் – Phycology
239. பாப்பிரசு சுவடியியல் – Panyrology
240. பாம்பியல் – Ophiology

241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் – Mammalogy
243. பாறைக் காந்தவியல் – Palaeo Magnetism
244. பாறையியல் – Lithology
245. பாறை அமைவியல் – Petrology
246. பிசாசியல் – Diabology
247. பிளவையியல் – Oncology
248. புத்த இயல் – Buddhology
249. புத்தியற்பியல் – New physics
250. புதிரியல் – Enigmatology
251. புதைபடிவ இயல் – Ichnology
252. புல உளவியல் – Faculty Psychology
253. புல்லியல் – Agrostology
254. புவி இயற்பியல் – Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் – Biogeography
256. புவி வடிவ இயல் – Geodesy
257. புவி வளர் இயல் – Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் – Geography
260. புவிவெளியியல் – Meteorology
261. புள்ளியல் – Ornithology
262. புறமண்டிலவியல் – Exobiology
263. புற்று நோய் இயல் – Cancerology
264. பூச்சி பொட்டு இயல் – Acarology
265. பூச்சியியல் – Entomology
266. பூச்சியியல் – Entomology
267. பூச்சியியல் – Insectology
268. பெயர்வன இயல் – Acridology
269. பெரு வாழ்வியல் – macrobiotics
270. பேயியல் – Demonology
271. பொதுஅறிவு இயல் – Epistemology
272. பொருள்சார் வேதியியல் – Physical Chemistry
273. போட்டியியல் – Agonistics
274. போதனையியல் – Patrology
275. மகளிர் நோய் இயல் – Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் – Craniology
277. மண்ணியல் – Pedology
278. மண்புழையியல் – Aerology
279. மணி இயல் – Campanology
280. மணிவியல் – Gemolog

281. மதுவியல் – Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் – Photoxylography
283. மரபு இயைபியல் – Genecology
284. மரபு வழியியல் – Geneology
285. மரவரியியல் – Dendrochronology
286. மரவியல் – Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் – Posology
288. மருத்துவ நோயியல் – Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் – Clinical genetics
290. மருந்தாளுமியல் – Pharmacy
291. மருந்தியல் – Pharmacology
292. மருந்து வேதியியல் – Medicinal chemistry
293. மலையியல் – Orology
294. மழையியல் – Ombrology
295. மனக்காட்சியியல் – Noology
296. மனநடையியல் – Nomology
297. மன்பதை உளவியல் – Social Psychology
298. மன்பதையியல் – Sociology
299. மனைவளர்உயிரியல் – Thremmatology
300. மாந்த இனவியல் – Ethnology
301. மாவியல் – Morphology
302. மானிடவியல் – Anthropology
303. மின் ஒலியியல் – Electro-acoustics
304. மின்வேதியியல் – Electrochemistry
305. மின்னணுவியல் – Electronics
306. மீனியல் – Ichthyology.
307. முகிலியல் – Nephology
308. முட்டையியல் – Oology
309. முடியியல் – Trichology
310. முதற்கோட்பாட்டியல் – Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் – Andragogy
312. முதுமையியல் – Gerontology
313. முரண் உயிரியல் – Teratology
314. முரணியல் – Heresiology
315. முறையியல் – Systomatology
316. முனைப்படு வரைவியல் – Polarography
317. மூக்கியல் – Rhinology
318. மூதுரையியல் – Gnomology
319. மூப்பியல் – Gerontology
320. மூலக் கூறு உயிரியல் – Molecular biology

321. மெய் அறிவியல் – Philosophy
322. மெய்ம்மி நோயியல் – Histopathology
323. மெய்ம்மியியல் – Histology
324. மேகநோயியல் – Syphilology
325. மொழியியல் – Philology
326. மோப்பவியல் – Olfactology
327. ரூனிக்கியல் – Runology
328. வகையியல் – Taxology
329. வண்ணவியல் – Chromatology
330. வழக்குப் பேச்சியல் – Dialectology
331. வழிபாட்டியல் – Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் – Aerobiology
334. வாந்தியியல் – Emetology
335. வாய்நோயியல் – Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் – Astrophysics
338. வானஞ்சலியல்
...............(வானஞ்சல்தலையியல்) –Aerophilately
339. வானியல் – Astronomy
340. வானிலை இயல் – Neteorology/Astrometeorology
341. வானோடவியல் – Aerodonetics
342. விசை இயக்க இயல் – Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் – Astrobiology
345. விண்பொருளியல் – Astrogeology
346. விந்தையியல் – Thaumatology
347. விலங்கியல் – Zoology
348. விளைச்சலியல்
........................(வேளாண் பொருளியல்) –Agronomics
349. வெளிற்றியல் – Agnoiology
350. வேதியியல் – Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் – Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் – Etymology

நன்றி: வேளாண்மை செய்திகள் R.அன்பரசு.

பெற்றோர்களே தயவு கூர்ந்து பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்களை நடத்தாதீர்.....

# உங்களது  குழந்தை பருவத்தின் இனிமையான நிகழ்வுகளை பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல சொல்லிக்கொடுங்கள்.
👉 நாமும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை அது தூண்டிவிடும். 

# உங்களது தாய் தந்தையரின் உயர்வான குணங்களை உங்களை வளர்த்தெடுக்க படிக்கவைக்க திருமணம் செய்துகொடுக்க அவர்கள் பட்ட துன்பங்களை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லிக் கொடுங்கள்.
👉 குடும்பத்தின் மூத்தவர்கள் மீது இனம்புரியாத ஈர்ப்பும் மரியாதையும் உண்டாகும்.

# உங்களைச் சுற்றி நடக்கும் சமூக அரசியல் நடப்புகளை கூட்டல் குறைத்தல் இல்லாமல் சொல்லிக்கொடுங்கள்.
👉 நாளை சமூக களத்தில் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளை சந்திப்பதற்கு அவர்களை தயார்படுத்தும்.

# மோசமான தோல்விள் எதார்த்தம் என்றும் அவற்றை சந்தித்து தான் ஆக வேண்டும்  என்றும் கற்றுக்கொடுங்கள்.
👉 உங்கள் பிள்ளைகளை வெற்றியாளர்களாக நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். 

# பசி வறுமை ஏழ்மை இவற்றை அனுபவங்களோடு கண்ணீர் மல்க கற்றுக்கொடுங்கள்.
👉 அதில்தான் பிள்ளைகள் மனிதத்தன்மை பெறுவதற்கான அபூர்வ சூட்சுமம் அடங்கியுள்ளன.

# தர்மம் செய் என்று சொல்லாதீர். மாறாக கைபிடித்து உங்களோடு செய்ய வையுங்கள்.
👉 தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்  என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து வரும் உண்மை என்பதை மறவாதீர்.

உலகின் எந்த கல்விமுறையிலும் எந்த பாடப்புத்தகங்களிலும் இதை பார்க்க முடியாது. ஆனால் இது தான் உங்கள் பிள்ளைகளுக்கு இப்போதும் எப்போதும் தேவையான பாடமும் பயிற்சியும் படிப்பினைகளும் என்பதை மனதார நம்புங்கள்.

பொன்போல வாய்த்த இந்த ஓய்வு காலத்திலாவது பாடப்புத்தகங்களை சற்று ஒதுக்கி வையுங்கள்.

கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

கொய்யாப்பழத்தைக் கடித்துச் சாப்பிடுங்கள். பற்களும் ஈறுகளும் பலம் பெறும். கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.


மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தினைத் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிடலாம்.

விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே அழித்துவிடும்.

கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புக்கள் உள்ளன.
கொய்யாப்பழத்தில் நிறைய வைட்டமின் C உள்ளது.கொய்யாப்பழம் வளரும் சிறுவர்களுக்கு எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும்
அளிக்கின்றது.
(சித்தா மருத்துவக் குறிப்புக்கள்)

நன்றி அப்துல் முத்தலீப் 

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம்...

பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் ... கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்

வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும்

பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,

இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,

ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,

எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,

புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி......

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய் தொற்றுக்களை தவிர்ப்போம்...

இதன் மூலம் உடலுக்கு நோய்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களை தவிர்க்கவே முயல்வோம் .

நன்றி Dr. Thenmozhi Rajendhiran  ... 

மனிதம் பரப்புவோம் - கொரோனா ஒழிப்போம்!

நாமெல்லாம் மருத்துவர்களுக்காகக் கைதட்டினோம்...
மருத்துவர்கள் யாருக்காகக் கைதட்டினார்கள் தெரியுமா?
மனிதம்  - பரவட்டும் திக்கெட்டும்! ❤️

'வைரஸ்’ திரைப்படத்திலொரு காட்சி வரும். (நிப்பா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிந்திராத) ஒருவர் கடுமையான இருமலுடன், மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரிடம் செல்வார்.

அந்த ஓட்டுநர் அவரை அண்ட விடாமல் விரட்டுவார்.  அந்த வழியே   ‘பைக்’ இல் வரும் நபரிடம் அவர் ‘லிஃப்ட்’ கேட்கபதற்காக இடைமறிக்க, உடனே ஆட்டோ ஓட்டுநர், “இவருக்கு நிப்பா வைரஸ் இருக்கு போய்விடு...” என்று சொல்ல, ‘பைக்’இல் வந்தவர் பேயைக் கண்டு அரண்டதுபோல ஓடுவார்...
பிறகு அந்த நோயாளி கட்டையால் தாக்கப்படுவது போல் காட்சி முடியும்.

கொரோனாவைரஸ் தொற்று என மதுரையில் ஒரு இளைஞரை ஒரு சிறு லாரியில் எப்படி ஏற்றினார்கள், எப்படி அவரைக் கையாண்டார்கள்; இறுதியில்  நோய்த்தொற்றே இல்லாதிருந்தும் சமூகம் தந்த அழுத்தத்தால், அவர் எப்படி தம் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது பற்றிய செய்தியும் அறிந்திருப்போம்.

அடுத்ததாக, மருத்துவப் பணியாளர்களைப் போற்றும் விதமாகக் கைதட்டியும், விளக்கொளியேற்றியும் நன்றி தெரிவித்து செல்ஃபிகளைப் பகிர்ந்தோம், ஆனால்,

அதே மருத்துவர்களில் சிலர் கொரோனாவைரஸ் தெற்றேற்பட்டு மரணமடைந்துவிட்ட நிலையில், அவர் உடலைப் புதைக்க இடம்தர மறுத்து நடந்த பெரும் சோக நிகழ்வுகளையும் அறிந்திருந்தோம்.

இரண்டு நாள்களுக்கு முன் ஸ்பெயினில் என்ன நடந்தது தெரியுமா? நாம் அறிந்திருக்கமாட்டோம்.

உலகில் கொரோனாவைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஸ்பெயினும் ஒன்று. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 இருபதாயிரத்திற்கும் அதிகம் இறந்திருக்கிறார்கள். இந்நிலையில், நோய்த் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு இலவசமாகத் தமது டாக்ஸியில் கொண்டுபோய் விடுவதை ஒரு டாக்ஸி டிரைவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

 அவர் கொரோனாவைரஸ் நோயாளிகளிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இதை ஒரு சேவையாகவே செய்து வந்திருக்கிறார்.

இதையறிந்த மருத்துவர்கள் இரண்டு நாள்களுக்கு முன் அந்த ஓட்டுநரைத் தொலைபேசியில் அழைத்து மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும். வரமுடியுமா?” என்று கேட்க, உடனே வருகிறேன் என்று மருத்துவமனைக்கு விரைந்து வரவேற்பரையை அடைந்தவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி....

ஆம், நீங்கள் வீடியோவில பார்ப்பதுபோல, அவர் உள்ளே நுழைந்ததும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்திருக்கிறார்கள். ஒன்றும் புரியாமல் விழித்த ஓட்டுநருக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது மருத்துவக்குழு.....  பெரிய தொகைக்கான ‘செக்’ ஒன்றினை அளித்திருக்கிறார்கள். மகிழ்வுற்ற ஓட்டுநர் நன்றி தெரிவித்து நெகிழ்கிறார்.

டாக்ஸி ஓட்டுநர் சங்கம் இவரால் பெருமிதம் கொண்டு, “இது சோதனைக்காலம் இல்லை; மனிதர்கள் மனிதம் பரப்ப உகந்த காலமிது!” என்றிருக்கிறது!!

பதிவர்- Rafeeq Sulaiman

எழுதி வையுங்கள்..கொரோனாவை *இல்லையெனில்* வருங்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.! தனிமை நாட்கள்!!

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

காய்கறிச்சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும் மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தலங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*


நன்றி Ashok 

மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.



மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா.

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

நன்றி Eswari Press
# விஜயன் சி

மாதுளம்பழத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன.


இனிப்பு மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும்.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

மாதுளம் பழ ஜூஸ் தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் நினைவாற்றல் பெருகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை
குணமாகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவிற்குப் பின் ஒரு மாதம் தினமும் சாப்பிட்டால் உடலில் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

(சித்த மருத்துவக் குறிப்புகள்)
நன்றி Muthalib

அருமையான கிராமியப் பாடல்...

மச்சானைப் பார்த்தீங்களா!


கருக்கலிலே கலப்பையுடன்
கழனிக்குப்போன மச்சான்
வருத்தும் வெய்யில் வந்தபின்னும்
வரக்காணோம் கூழ் குடிக்க!
கம்பங் கூழ் காச்சி வச்சேன்
கண்மாய் மீன் குழம்பு வச்சேன்!
தும்பைப்பூ போலச் சோறு
சுடச்சுடவே ஆக்கி வச்சேன்!
விரா மீனு ஆனங்காச்சி
விருந்தாக்கி வச்சிருக்கேன்!
வரலியே மச்சானும்
வயித்தெவேறே பசிக்கிதிங்கே!
குடிச்சிப்புட்டு மரநிழலில்
கூட்டாளி சனங்களோடு
பிடிச்சபாட்டைப் பாடினாரோ
பின்னே என்ன செஞ்சாரோ!

வயசுப்பொண்ணு வீட்டினிலே
வாக்கப்பட்டு வந்திருக்கேன்
பய மனசு மாறிடுச்சா
பாத்துக்கிறேன் வரட்டுமிங்கே!

நன்றி muthalif

மீன்பிரியரான நான் அதோடு சேர்ந்து மிதந்து விட்டேன்!!

ஆகச்சிறந்த மீன் குழம்பு என்பது யாதெனில்.....



நல்ல ஒரு கிலோவிற்க்கு குறையாமல் ஒரே மீனாக உயிரோடிருக்கும் விரா  மீனா பார்த்து வாங்கி, அதை குழம்புக்கு தனியா வறுவலுக்கு தனியா வெட்டி, மீன் குழம்புக்கு தேவையான சகல மசாலாக்களை சேர்த்து குறிப்பாக சின்ன வெங்காயம், பச்சமிளகா, வெந்தயம் சேர்த்து நல்லா கொதித்த பின்பு விரா மீன் மண்டையையும் வாலையையும் போட்டு, இறக்கும்போது ஒட்டு மாங்கையை குறுக்கு வெட்டாய் வெட்டி போட்டு இறக்கி, குறுத்து வாழை இலையாய் பார்த்து, அதில் முனை இலையை வெட்டி தண்ணி தெளித்து, வறுத்தமுனுக்கு இரண்டு வச்சு, பொன்னி அரிசியை பதமாய் வடித்து நடுயிலையில் போட்டு, இறக்கி வைத்த மீன் குழம்பை ஊத்தி, குழம்பு மீன்ல கொஞ்சம் வறுத்த மீன்ல கொஞ்சம் சோத்தோட சேர்த்து நாக்குல வச்சா காரமும் புளிப்பும் அப்படியே உச்சந்தலைக்கு ஏறனும். உள்நாக்க தொட்டு தொண்டையில இறங்குனா அமிர்தம் தேவாமிர்தம்......

நன்றி தேவி.