கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

கொய்யாப்பழத்தைக் கடித்துச் சாப்பிடுங்கள். பற்களும் ஈறுகளும் பலம் பெறும். கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.


மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழத்தினைத் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிடலாம்.

விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே அழித்துவிடும்.

கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புக்கள் உள்ளன.
கொய்யாப்பழத்தில் நிறைய வைட்டமின் C உள்ளது.கொய்யாப்பழம் வளரும் சிறுவர்களுக்கு எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும்
அளிக்கின்றது.
(சித்தா மருத்துவக் குறிப்புக்கள்)

நன்றி அப்துல் முத்தலீப்