*அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!*


அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்

வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்

உத்தமன் என் பிள்ளை என்று

விட்டு கொடுக்காமல் பேசுவாயே

அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்

தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "

போய்வாட என நீ சொல்ல

இந்த வயதில் கடைக்கு போவதா?..

என நான் சொன்னேன்..!!

இன்றோ..

இங்கே கண்ணுக்கு தெரியாத

யாரோ ஒருவருக்காக ஓயாமல்

வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்

உந்தன் கை பக்குவ உணவு

நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.

இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!

கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா

சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல

பத்து நிமிஷமா..!, நான் வெளியல

சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி

கிளம்பிய தருணங்கள்..!!

இன்றோ..

இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு

சாப்பிடும் போதே கண்கள் களங்க

இன்று காரம் கொஞ்சம் அதிகம்

போய்விட்டது என கடைக்காரர்

சொல்ல..!!
எனக்கு மட்டும் தெரிந்த

உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்

ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது

ஏங்குகிறேன் அம்மா..!!

அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்

வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்

தடவி விடும் எண்ணெய் துளிகள்

வேண்டா வெறுப்பாய் நிற்கும்

நான்..!!

இன்றும்

என் தலை முடி சகாராதான் அம்மா

உந்தன் கை ஒற்றை எண்ணெய்

துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!

ஆசையால்..

மழையில் நனைந்து வர

முனுமுனுத்தபடி துடைப்பாய்

உந்தன் முந்தானையில்

இப்போது நனைகிறேன்

ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,

அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை

திட்டும் நீ..! அந்த நொடியில்

எதிர்த்து பேசினேனே அம்மா..!!

இன்றோ..

இங்கே உயர் அதிகாரி திட்ட

சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே

அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!

தொலைபேசியில்...

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,

பார்த்து வாங்கிய புடைவையை பற்றி

சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்

வருமே..! கண்ணு உனக்காக

ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது

எடுத்துகிட்டு போடா என்று..!!

எப்படி அம்மா சொல்வேன் எந்தன்

அன்பையும் , எண்ணத்தையும்

என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...

கைபேசியை எடுத்து , அம்மா....என்று

சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது

எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு

நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா

இருக்க..!!!

என் அன்னை ஆயிற்றே...

எந்தன் ஒற்றை வார்த்தையில்

புரிந்து கொள்வாய் எந்தன்

மனதை..!!

நான் சொல்ல மறந்த வார்த்தைகளை

பக்குவமாய் பட்டியளிடுவாய்..,

"வேளைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "

"மறக்காம எண்ண தேச்சி குளிடா"

"ரோட்ல பத்திரமா பாத்து போடா"

" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "

என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்

என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே

அம்மா..!!

உன்னை என்னிடம் இருந்து பிரித்த

இந்த வாழ்க்கையை திட்டுவதா..?

இல்லை..

உந்தன் மேல் நான் வைத்திருக்கும்

பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!

உனக்காக உயிரற்ற பொருட்களால்

அன்பு சின்னம் அமைத்து என்ன

பயன்..!!

உதிரம் எடனும் பசை தடவி

எலும்பு என்னும் கற்கள் அடுக்கி

உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

அம்மா என்றும் உந்தன்

காலடியில்...!!!

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்


insomniaசில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .

1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும் tryptophan என்ற பொருள் நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது. பால் உணவுகளில் இருக்கும் கால்சியம் இந்த tryptophan பொருளை பயன்படுத்தி melatonin என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இது மூளைக்கு அமைதியை ஏற்படுத்தி நிம்மதியான உறக்கத்தை அளிப்பதாக ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
2. ஓட்ஸ் உணவுகள் (Oots)
ஓட்ஸ் உணவுகளில் மேலே சொல்லப்பட்ட melatonin என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது உடலின் சீரான  இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் இல் கால்சியம் மற்றும் மெக்னீசியம் பொருட்களும் அதிக அளவில் உள்ளன. ஓட்ஸ் ஐ பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. (www.kalvikalanjiam.com)
3. வாழைப்பழம் (Bananas):
உடலில் ஏற்படும் தசை பிடுப்புகள் தூக்கம் வராததற்கு காரணமாக அமைகின்றன. வாழைப்பழங்களில் உள்ள  மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. இரவு சாப்பாட்டிற்கு வாழைப்பழம் சிறந்த உணவு. (www.kalvikalanjiam.com)
நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) இல் உள்ள University of New England ஆராய்ச்சி கூடத்தின் விஞ்ஞானிகள் இரவில் வாழைப்பழம் சாபிடுவது சிறந்த உறக்கத்திற்கு உதவுவதாக நிரூபித்துள்ளனர்.
4. செர்ரி உணவுகள் (Cherries)
செர்ரிகளில் உள்ள melatonin பொருள் சிறந்த உறக்கத்தை அளிப்பதோடு செர்ரி உணவில் உள்ள மற்ற பொருட்கள் நல்ல உடல் ஆரோக்கியதிகும் உதவுகின்றன. (www.kalvikalanjiam.com)
The Journal of Sleep and Sleep Disorders Research என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் செர்ரி உணவுகளில் உள்ள பொருட்கள் சிறந்த மற்றும் வேகமான உறக்கத்திற்கு உதவுவதாக கூறுகின்றனர்.
5. ஆளி விதைகள் (Flax seeds)
ஆளி விதைகளில் உள்ள பொருட்கள் நம்முடைய தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
என்ன நிம்மதியான உறக்கத்திற்கு தயார்தானே

Thanks to http://www.kalvikalanjiam.com

Time Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்!

நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.

* ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
*உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.
*நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.
*தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.
*மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.
*உங்கள் வேலையே மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தேவைற்றை வேலைகள் (distraction – கவனம் திசை மாறாமல்) செய்யாமல் இருக்க வேண்டும்.
*உங்கள் வாழ்க்கை சீரமைத்து கொள்ளவது மிகவும் அவசியம். நம் எந்த பாதையில் இருக்கின்றோம், எதை நோக்கி செல்கிறோம் போன்ற விஷயங்கள் மனதில் வைத்து செயல் பட வேண்டும்
*நல்ல முடிவுகளை திறம்பட கால சூழ்நிலைகளை கருதி எடுக்க வேண்டும்.
எழுச்சியூட்டும் குறிக்கோள்களை அமைத்து, அதை நம் வாழ்நாளில் அடைய பாடுபட வேண்டும்.
*உங்கள் வேலையும் – வாழ்கையும் சமமாக பார்க்க வேண்டும். முழு நேரம் வேலைக்காக செலவு செய்வதன் மூலம் பலன் ஏதும் இல்லை.
*உங்கள் வேலையை ஒரு பழக்கமாக உருவாக்க வேண்டும்.
*உங்கள் வேலை பளுவை நிரவகிக்க கற்று கொள்ள வேண்டும்.
*உங்களின் நேரத்தையும் அதன் மதிப்பையும் போற்ற வேண்டும்.
*இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.

Thanks To www.kalvikalanjiam.com

ஆசிரியர்களுக்கான புதிய YOU TUBE சேனல்

வீடியோக்களில் பிரபலமான YOU TUBE வலைதளம் ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான youtube.com/teachers என்ற சேனலை உருவாக்கி உள்ளது . இந்த சேனலை பயன்படுத்தி வீடியோ மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படங்களை நடத்த முடியும் . மேலும் கல்வி சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகளை இந்த சேனலில் பார்த்து உங்கள் அறிவு திறனை வளர்த்து கொள்ளலாம்.


இந்த வலை தளம் கீழ்க்காணும் சேவைகளை அளிக்கிறது.
1. நேரடி ஒளிபரப்பு  (LIVE TELECAST)
2. நேரடியாக கருத்துக்களை பகிர்த்து கொள்ளும் வசதி
3. உங்களுக்கு பிடித்த வீடியோக்களை தொகுப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
4.  நீங்கள் கடைசியாக பார்த்த வீடியோவை எளிதில் சேமித்து வைக்கும் வசதி.
5. குறிப்பிட்ட உங்கள் பாடங்களுக்கு ஏற்ற வீடியோக்களை தேடி எடுக்கும் வசதி.
அது மட்டும் அல்லாமல் http://www.youtube.com/education என்ற வலைதளத்தில் கல்வி மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகள் உள்ளளன. இந்த வலைபதிவும் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள பயன் உள்ளதாக உள்ளது.

Thanks To Kalvi

சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.


இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.

நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.

தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.

மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.
மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

Thanks to 
http://www.kalvikalanjiam.com