கண்மூடித்தனமான கொண்டாட்டங்கள்

பிறந்த நாள் கொண்டாட்டம், 
திருமணக் கொண்டாட்டம், 
புத்தாண்டுக் கொண்டாட்டம், 
காதலர் தினக் கொண்டாட்டம், 
நண்பர்கள் தினக் கொண்டாட்டம்
முதலான கொண்டாட்டங்கள் 
ஊடகங்கள்
பெற்றுப்போட்டவை.  
தமிழன் கொண்டாடிய
தைத்திருநாள் கொண்டாட்டம் 
ஏழைகளை மகிழச் செய்தது;
விவசாயிகளைச் சிரிக்கச் செய்தது. 

இன்றைய இளைஞர்கள் 
கொண்டாடுகிற
திருமணக் கொண்டாட்டத்தால்
யாருக்கு என்ன பயன்?
கேக்கை வெட்டி 
மாப்பிள்ளை முகத்தில் 
அப்புவதா மகிழ்ச்சி?
கேக்கை முகத்தில் 
வீசியெறிவதா மகிழ்ச்சி?‏
வண்ண வண்ண 
அலங்காரத் துகள்களை
அள்ளியெறிவதா மகிழ்ச்சி? 
இதனால் யாருக்கு
என்ன பயன்?
ஆண்டின் முடிவில் 
ஆபத்தோடு விளையாடும்
இளைஞர்களின்
புத்தாண்டுக் கொண்டாட்டம். 
இது ஒரு 
கண்மூடித்தனமான கொண்டாட்டம். 

மதுவைப் பருகிவிட்டு
கண்மண் தெரியா வேகத்தில்
வாகனத்தில் சீறிப் பாய்வது
என்ன வகை கொண்டாட்டம்?
அப்பாவி மக்களை
அச்சுறுத்துவதும் 
ஆபத்தை விளைவிப்பதும்
என்ன வகை கொண்டாட்டம்?

கொண்டாட்டம் என்பதென்ன?
நாம் மகிழ்வதும்
நம்மால் பிறர் மகிழ்வதுமே. 

சீர்கெட்ட வேகத்தில் 
சீறிப்பாய்வதால் 
யார் மகிழ்ந்தார்? - முரணாக
உன்னைப் பெற்றெடுத்தோர் 
உன்னை இழந்தார். 

சாலையில் செல்வோரை
சந்தூக்கில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?
பாதையில் செல்வோரைப் 
பாடையில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?

கடந்துவிட்ட நாள்களைக்
காசு கொடுத்து வாங்க முடியாது.
எதிர்காலத்தையேனும் 
எப்படிப் பயன்படுத்துவதெனத் 
திட்டமிடு; தீர்மானம் கொள். 

காலத்தைக் கட்டிப்போட்டுப் 
பயன்படுத்தினால் 
காலம் உன்னை மதிக்கும். 
இல்லையேல்
காலம் உன்னை மிதிக்கும்
நினைவில் கொள். 

-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
19.12.2020   03 05 1442

பதிவர்

நூ அப்துல் ஹாதி பாகவி 
===================

இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை
--------------------------------------------------
அரவிந்த ராஜ் 

இன்று நாம் பார்க்கப்போகும் தலைப்பு கீழுள்ள புகைப்படத்தை பற்றியே !!

இதை பார்த்ததும் 'அட... இது எனக்கு இருக்கே, எனக்கு தெரிஞ்ச நண்பருக்கு இருக்கே' என உங்களில் பலர் நினைக்கலாம்.

இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

பின்னங்கழுத்து, கழுத்தின் ஓரங்களில் கருப்பாக தட்டையாக இருக்கும் இதை சரிசெய்ய தமிழர்கள் தொன்றுதொட்டே கடலைமாவு, முல்தானி மட்டி போன்றவற்றை தடுவுவதை கண்கூட பார்த்திருக்கிறோம்.

ஆனால், அது நிரந்தரமாய் மறைந்துவிட்டதா எனக் கேட்டால் பதில் 'ஹூம்ஹூம்' என்பதே. ஏன் மறையவில்லை ?? இதை படித்து முடிக்கையில் உங்களுக்கே புரியும்.

இந்த ACANTHOSIS NIGRICANS ஏற்பட மிகமுக்கிய காரணம் 'Insulin Resistance' (இன்சுலின் எதிர்ப்புத்தன்மை)

Insulin Resistance என்றால் என்னவென நான் கூறுவதற்கு முன்பாக இன்சுலின் என்றால் என்ன? அதன் பணி என்ன? என்பதை கூறுகிறேன்.

நமது மனித உடல் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதில் 'கணையம்' என்னும் பகுதி உற்பத்தி செய்யும் மிகமுக்கிய ஹார்மோன் இந்த 'இன்சுலின்'.

இன்சுலின் நமது நண்பன். அதன் பணி என்னவென்றால், எப்போதெல்லாம் நம் உண்ணும் உணவு செரிமானமாகி ரத்தத்தில்  சர்க்கரை அளவை கூட்டுகிறதோ, அப்போது இன்சுலின் சுரக்கும். சுரந்த இன்சுலின் ரத்தத்தில் அதிக அளவில் உள்ள சர்க்கரையை குறைக்க நமது உடலில் உள்ள செல்களுக்கு உள்ளே அவற்றை சேமித்துக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கும். செல்கள் அந்த சர்க்கரையை சேமித்து, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க இன்சுலின் உதவும்.

இப்போது நாம் அதிக மாவுச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்கிறோம் என்றால் சர்க்கரை அளவு எக்கச்சக்கமாய் அதிகரிக்கும்; விளைவாக கணையம் நிறைய இன்சுலினை சுரக்க ஆயத்தப்படும். இதே போன்று பல்வேறு வாரங்களாக, மாதங்களாக, கணையம் நிற்காமல் மிகஅதிக அளவில் இன்சுலினை சுரக்கும். ஒருகட்டத்தில், நானும் 'எவ்ளோ அடிதான் தாங்குவேன்' என உடலில் உள்ள செல்கள் 'என்னால் இதற்கு மேல் சர்க்கரையை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நிரம்பிவிட்டேன்' என கைவிரித்துவிடும். எவ்வளவு இன்சுலின் சுரந்தாலும் செல்கள் அவற்றை ஏற்காத காரணத்தால் ரத்தத்தில் சர்க்கரை ஏறிக்கொண்டே போகும். இது தான் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை. அதாவது உடலில் அதிகமாக இன்சுலின் சுரக்கும். ஆனால், அவற்றின் கட்டளைக்கு செல்கள் அடிபணியாது.

ரத்தத்தில் அதிகமான சர்க்கரை கொழுப்பாக நமது உடலில் சதைக்கு கீழே சேமிக்கப்படும். தொப்பை போடும்; உடல்பருமன் உண்டாகும்; நீரிழிவு, ரத்தஅழுத்தம் ஏற்படும். இவ்வாறாக பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை போன்று நமது தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் தான் இந்த 'Acanthosis Nigricans'.

எனவே, இப்படியாக உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆரம்பித்துவிட்டது என்பதை உணர வேண்டும்.

இதை நிவர்த்தி செய்ய கணையத்திற்கு சிறிது ஓய்வளித்து, இன்சுலினை அதிக அளவு தூண்டாமல் இருப்பதே சரி என்பதை உணர்தல் வேண்டும்.

எனவே,

1.மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்

2.எண்ணையில் பொறித்த உணவுகள், பேக்கரி உணவுகளில் உள்ள 'Refined Carbohydrates' வகையறாக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.உடல் பருமன் கொண்டவர்களுக்கு இது பரவலாக இருக்கும். ஆகவே, மாவுச்சத்தை குறைத்து உண்டு தினசரி 30 நிமிடம் நடக்க வேண்டும். அதேபோன்று, உடலில் தேவையற்ற சர்க்கரை கொழுப்பாக மாறியுள்ளது அல்லவா?? அதை எரிக்க நாம் உண்ணாவிரத முறையையும் கடைபிடிக்கலாம். உண்ணாவிரதம் மூலம் உடலில் சேமிப்பு நிலையில் உள்ள கொழுப்பு நன்றாக எரியும்.

4.இப்படியானவர்களில் பலருக்கு ஆரம்ப கால நீரிழிவு (Pre-Diabetes) இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரை ஆலோசித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.

5.பெண்களுக்கு PCOD எனப்படும் சினைப்பை கட்டியின் ஒரு அறிகுறி இது. இதையும் உறுதிபடுத்திக்கொண்டு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

6.தற்போதைய சூழலில் உடல்பருமன் கொண்ட குழந்தைகள் பலருக்கு இது இருக்கும். பெற்றோர் இது வெயிலில் சுற்றுவதால் வந்தது, அழுக்கு என நினைக்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனியில் உள்ள சர்க்கரையின் விளைவே இது. ஆகவே, குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் எச்சரிக்கையாக பெற்றோர் செயல்பட வேண்டும்.

நீங்களாகவே எந்த ஆலோசையும் இன்றி க்ரீமை பூசிக்கொள்ள வேண்டாம். அது தவறு !!

நன்றி. ❣️

Dr.Aravindha Raj.

Implications of Tata ~ Apple deal


கடந்த புதன்கிழமை டாடா 11 ஆயிரம் கோடி செலவில‌ Apple Manufacturing Unit ஆரமிக்க போறதா ஒரு செய்தி வெளியானது. அதனோட effect பத்தி ஒரு குட்டி மினிபைட் பாப்போம்.



Apple comany ah பொருத்தமட்டில் அதோட assembling section தான் இந்தியால இருக்கே ஒழிய, manufacturing வெளிய தான் இருக்கு. வெளிய இருந்து மொபைல் இங்க இறக்குமதி ஆகுறனால தான் Apple இங்க கொள்ள ரேட்டுக்கு விக்கிது.

1. இப்போ இந்தியால manufacturing unit வச்சிட்டா ஆப்பிள் ரேட் குறைஞ்சிடுமா ?

கண்டிப்பா குறையும். வெளிநாட்டுல இருந்து வர பொருளுக்கு GST + Custom Duties tax போடுவாங்க.

இதனால ஒரு ஆப்பிள் போன் இப்போ இறக்குமதி ஆகும் போது 18℅ GST வரிதொகையும், 20% Custom duties 
um , 2% cess வரியும் கட்டனும்.

ஆனா இந்தியால தயாரிக்கிற மொபைலுக்கு வெறும் GST தொகை 18℅ மட்டுமே வசூலிக்கப்படும். இதனால கிட்டத்தட்ட 15 - 20 ஆயிரம் வரை மொபைல் ரேட் குறைய வாய்ப்பு இருக்கு.

2‌. ஒரு வேளை ஆப்பிள் அதே ரேட்டுக்கே மொபைல் வித்தா ?

நம்ம டிக்டோக் பேன் பன்னும் போது , மேலும் சீன பொருள்கள் உபயோகிப்பதை குறைக்க வேணும். அதுக்கு இந்தியால அந்த பொருள்கள் எல்லாத்தையும் தயாரிக்க வேணும். அதுக்கு அரசு தரப்பில இருந்து ஊக்கதொகையோ அல்ல வரிவிலக்கோ அளிக்க வேண்டும்னு Product linked incentive னு ஒரு scheme launch பன்றாங்க. இதுக்கு கீழ automobile telecom னு ஒரு 10 sector வருது. இதுல முதல் திட்டமா ஆப்பிள் project தான் வருது. இது மூலியமா கிட்டதட்ட 4 -6% வரை incentive கிடைக்கும்.

அது மட்டுமில்லாம fab தயாரிக்கும் நிறுவனங்களுகென்று பிரத்தியேகமாக 25% incentive வழங்க SPECS எனும் திட்டத்தையும் Ministry of Electronics & Information Technology வகுத்துள்ளது. அதுவும் டாடா க்கு ஒரு லாபம்.

3. அது என்ன fab?

நம்ம மொபைல இருக்க குட்டி குட்டி circuit, chip, semiconductors , இதெல்லாம் தயாரிக்கும் unit ah தான் fab னு சொல்வாங்க. இதுக்கு ஊக்கதொகை வழங்க தான் Scheme for the Promotion of Electronic components and semiconductors ( SPECS ) ஆரமிக்கிறாங்க.

4. இது எப்போ கட்டி முடித்து நடைமுறைக்கு வரும் ?

ஆரம்பத்தில நம்ம இந்தியாவோட‌ electronic hub ஆன பெங்களூரில் தான் முதல ஆரமிக்க போறதா சொன்னாங்க. இப்போ அந்த project ah TamilNadu Government தூக்கிட்டு வந்துருச்சு. Fab ஆரமிப்பதற்காக கிட்டத்தட்ட 500 acre நிலத்தை Hosur இல் ஒதுக்கியுள்ளது TamilNadu Industrial Development Corp.

5. எல்லாம் சரி. இதனால நமக்கு என்ன லாபம் ?

நாடு னு பாக்குறப்ப , நிறைய fab இந்தியா ல ஆரமிச்சா, இந்தியால இருந்து electronic ஏற்றுமதி‌ அதிகமாகும்.
இதனால Forex அதிகரிக்கும். Subsequently GDP யும் ஏற்றம் காணும்.

தனி மனிதனு பாக்குறப்ப, oneplus வாங்குறவங்களும் ஆப்பிள் மொபைல் வாங்கலாம். 

நன்றி 🙏💕

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்...

❇ விழிப்புணர்வு பதிவு...

🌐 100 யூனிட்வரை இலவச மின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை  மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது...



பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை...

💢 உதாரணமாக..

🔘 இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.

▪ ஆனால்
 
 🔘  அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.


▫ அதுபோல

🔘 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.

🔘 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.

🔘 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.


🔘 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.

🔘 அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்  மாதம் 30 யூனிட் செலவாகும்.

🔘 75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.


🔘 400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.

🔘 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,  300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.

🔘 200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,  மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.

🔘 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.

🔘 இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக  உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது...

இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று.

படத்தில் இருக்கும் மரம்தான் 
#கருங்காலி_மரம்.

இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை #கோவில்_குடமுழுக்கின் போது கலசத்தினுள் போடுவார்கள்...

இந்த மரத்திற்கு #negative_energy அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா #சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள்.. 

அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் #walking_stick கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க.

தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யவேண்டும்,

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்

1. காற்று, கருப்பு அண்டாமல் இருக்க,

 2. குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க.

இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.

இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல!

"தற்கொலைக்கு முன் என்னை 
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...! "

- இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் 
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! 

நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!


அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்!

(தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம், காலா.) 

தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!

வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா 
மாவட்டம்.
 
கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது.

கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். 

அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி.

இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். 

இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில்,  அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். 

சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். 

இந்தித் திரையுலகில் பிரபலமான  மராத்திய நடிகர்.

திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும் தான் நானாவின் பிழைப்பு. 

தினச் சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். 

மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது. 

மூன்றே  மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா.   

மகாராஷ்ட்ராவில் சில ஆண்டுகளுக்கு முன் வரலாறு காணாத வறட்சி. 

கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்க முடியவில்லை. 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. 

நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது.

குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.

விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. 

சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். 

சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். 

முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. 

நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 

2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.

நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. 

இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். 

நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை.

மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. 

எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். 

கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மகாராஷ்ட்ராவில்,  இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது.

விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை  தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

 ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. 

அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.

திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானா தான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ.

கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில் தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா.

 ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது. 

'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது...

புற்றீசல்கள் போன்று தோன்றி மறைவதில்லை வாழ்க்கை.
வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை என்பது ஒருவகை.
இது மற்றொரு வகை.

மீள் பதிவு...

தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க

? ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்கள் பெயர்

1.பைத்தியம்
2.முட்டாள்
3.மூளை
4.யாரோ
5.எவனோ

ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...

மூளை பாத்ரூம் போயிருந்தான்...
சண்டைல எவனோ செத்துட்டான்.

உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..
பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!

போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?

பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..

போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்.

பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்.

போலீஸ்: முட்டாள்.. முட்டாள்.

பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து மெசேஜ் படிக்குறாப்புல்ல சார்...

Relax  plzz🙇

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

நோய்களை  நீக்குவதில் இஞ்சி  சமையலறை மருத்துவர்!

*1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

*2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

*3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

*4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

*5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

*6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

*7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

*8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

*9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

*10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

*11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

*12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

*13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

*14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

*15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

*16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை

*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.
                  #உங்கள்_நலம்_விரும்பி
                            #கிளியாநகர்
        #பண்ணையார்_மகன்_ஆனந்தபாபு

உன்னைத் தவிர வேறு எவனாலும் உன்னை மாற்ற முடியாது.

ரசிகவ் ஞானியாரின் எத்துனை
அற்புதமான வார்த்தைகள்:

மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள்தான் எல்லாமும் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், எவரையும் எந்த நிலையில் இருந்தும் மாற்றலாம். மாற்றப்படவே முடியாத சக்தி என்று எதுவுமில்லை.


நிறுவனத்திலிருந்தோ வாழ்க்கையிலிருந்தோ உங்களை அப்படியே மாற்றிவிடலாம். மாற்றவே முடியாதவர் என்று எவரும் இல்லை. 

15 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  அலுவலக நண்பர் இறந்துவிட்டார். ஒரு நிறுவனத்தில் இருந்து விலக வேண்டுமானால், அவருடைய பணிகளைப் பற்றி புதிதாக வருபவர்களுக்கு விளக்க வேண்டும், புதிதாய் வருபவர்களுக்கு 2 மாதங்கள் KT ( Knowledge Transfer) கொடுக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட  கட்டுப்பாடுகள் உண்டு.

ஆனால் இறந்த அந்த நண்பர் ஒருநாள் சட்டென்று மறைந்துவிட்டாலும் , நிறுவனம்  பணிகளில் தொய்வின்றி கடந்து கொண்டுதானிருக்கிறது , புதிய ஆட்களை  மாற்றிக்கொண்டு.

கதாநாயகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு கவுண்டமணி-செந்தில் இல்லாமல் படமே இல்லை என்கிற அளவுக்கு இருந்தவர்களையெல்லாம், காலம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, அடுத்தடுத்த ஆட்களை மாற்றிக்கொண்டு இன்னமும் வேகமாகத்தான் சினிமாத்துறை சென்று கொண்டிருக்கிறது.

என்னை விட்டால் ஆளில்லை என்கிற அளவுக்கு காமெடியில்  கொடிகட்டிப் பறந்த நடிகர் வடிவேலுவே இப்போது வானம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தன்னடக்கத்தை - பொறுமையை தரும் முதிர்ச்சி நல்ல அனுபவத்தில் இருந்து வருகிறது , ஆனால் சிலருக்கு அந்த முதிர்ச்சியே திமிராக மாறிவிடுகிறது. திறமை - அழகு - பணம்  இப்படி  வெவ்வேறு காரணிகளில் , மற்றவர்களை விட தாமே உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்களை, காலம் அந்த காரணிகளைக் கொண்டே அழித்துவிடும்.

ஒரு இயற்கைப் பேரிடர் உங்களை அப்படியே புரட்டிப் போட்டுவிடும்.

இடுக்கி மலையின் உச்சியில் மஞ்சிக்கவலா என்கிற பள்ளி முகாமில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் கூட்டங்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது, நன்றாக ஆடையணிந்த ஒருவர் வந்து தயங்கி தயங்கி "ஒரே ஒரு பிஸ்கெட் பாக்கெட் கிடைக்குமா ?" எனக்கேட்டார்.

அவரைப் பார்த்தால் இரந்து வாழ்பவர் போல தெரியவில்லை, ஆனால் அன்று அந்த நாளில் அந்த மனிதர் இறந்து வாழ்ந்தார். :(  

ஒரு பெரும் மழை அவருடைய அத்தனை வருட வாழ்க்கையை மாற்றிப் போட்டுவிட்டது. 

இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு, நீங்கள் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் அதே போல ஒரு பெரு மழைதான், அவரை வீட்டை விட்டே துரத்தி வீதிக்கு வர வைத்திருக்கிறது.

எதுவும் எவருக்கும் நிரந்தரமே அல்ல. இப்பொழுது பணம் கைகளில் நிறைய புழங்கும் ஆனால் சட்டென்று அது நின்றுவிடும்,  

ஆனால் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், காலத்தின் மீது ஏறி நின்று கொண்டு  , அதனை கயிறு கொண்டு பின்நோக்கி இழுக்க நினைத்து தோற்றுப் போனவர்கள் பலர். 

பணம் புகழ் இருக்கும்போது ஆடிவிட்டு, அதுவெல்லாம் கைமாறிப்போன பிறகும் கூட , அது தனக்கு இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருக்கும் நடிகர்கள் நடிகைகள் அழிந்த கதையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் சந்தித்திருப்பீர்கள், ஆணவத்தால் அழிந்தவர்கள் - மாற்றத்திற்கு ஏற்ப மாற மறுப்பவர்களை , எப்படி காலம் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை?

மாற்றங்கள் நிகழும்போது நிகழ்கின்ற அவமானங்கள் - வலிகள் - தோல்விகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு கடந்து போக வேண்டும், அதனுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் நினைவுகளில் துக்கமாகத்தான் பதிவு செய்யப்படும்.

கண்ணதாசன் அவர்கள் "கவலை இல்லாத மனிதன்" என்கிற படத்தை எடுத்தார். அது அவரும் பெரும் கவலைகளை  கொண்டு வந்தது.  பெரும் நஷ்டமாகி, கடனுக்குள் தள்ளப்பட்டார். 

அவர் நிறுவனத்திடம் இருந்த 10 கார்களை அப்படி அப்படியே கடன்காரர்களிடம் கொடுத்துவிட்டு, அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பழைய நிலைக்கு வந்து வாழ்ந்து கொண்டார்.

இன்னமும் அந்த கார்களிலேயேதான், பயணம் செல்ல வேண்டுமென நினைத்திருந்தால், கவிதைகளுக்குப் பதிலாக , அவருடைய வாழ்க்கையின் கறுப்படித்த பக்கங்கள்தான், இப்பொழுது நினைவுகளாகி இருக்க கூடும்.

ஒரு முனைப்புடன் பயணிக்கிறோம், அந்த முயற்சி ஏமாற்றமளிக்கிறது அல்லது நாம் விரும்பது போல நடக்கவில்லை எனில் ஏற்றுக் கொள்ளுதல் என்கிற நிலைக்கு வருவது சிறப்பு . 

அதனை விட்டு விட்டு அதற்கு எதிர்வினை ஆற்றினால்,
 எல்லா வினைகளும் நமக்கு எதிராகவே இருக்கும்.

"ஏண்டா பிறந்தோம்?" என்று பெரும்பாலானோர் சலித்துக் கொள்வதுண்டு - நீங்கள் விரும்பி பிறக்கவில்லை அதனை நீங்கள் மாற்ற முடியாது, ஏற்றுக்கொண்டுதான் பயணிக்க வேண்டும், அதுபோலவே நம்மைச் சுற்றி நிகழ்பவைகளும் .

ஒரு மழையைப் போன்று சட்டென்று ஒரு மரணம் வந்து போனால் கூட , எப்படி அந்த குடும்பம் - அந்த நிறுவனம் - அந்த நட்புகள் - அந்த சுற்றங்கள் எல்லாம் வழக்கம்போல சுழலுகின்றதோ? அது போலவே காலம் தன்னை சுழற்றும்.

கழட்டிவிட்டு புதுப்பித்துக் கொள்ளும் சக்தி காலத்திற்கு உண்டு, காலம் ஒரு பாம்புச் சட்டை போலத்தான், தேக்கி வைத்துக் கொள்ளாமல், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து கொண்டு , அதன் போக்கில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார் :

"கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது,
மீண்டும் மழை காலம் வருகிறது.

மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது,
அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது"

வேறு எவரும் உன் வாழ்க்கையை வந்து மாற்றிக் கொண்டிருக்க முடியாது.  மாற்றத்தை ஏற்படுத்துவதும் , மாற்றத்தை ஏற்றுக் கொள்வதும்,  மாற்றமாகவே மாறிவிடுவதும் நீதான்.

உன்னைத் தவிர வேறு எவனாலும் உன்னை மாற்ற முடியாது. 

மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஐஸ்வர்யா ராயே ஆண்டியாகிவிட்டார்..  :)

நன்றி:- #ரசிகவ்_ஞானியார்

இதுபோன்ற குடிநீர்க்குழாய் பிரச்சினை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்...

எங்கள் ஊரில்......

வீட்டுக் குடிநீர்க்குழாயில் எந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று யாரும் கணிக்கவே முடியாது....... திடீரென இரவு 2 மணிக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள்....... ஆனால் யாருக்குமே தெரியாது.....


இரண்டரை மணி நேரம் தண்ணீர் 
வந்திருக்கும்......ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் யாருக்குமே தெரிந்திருக்காது....... விடிந்த பிறகு பார்த்தால்..... வீட்டில் வாசல் முழுதும் தண்ணீர் தேங்கி..... குளம் போல் ஒரே சேறாகக் காட்சியளிக்கும்.

அடுத்தது இரண்டு நாட்களுக்கு பிறகு தான்..... குழாயில் தண்ணீர் வரும். அதுவும் எந்த நேரம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது......

நீண்ட கால இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நாள் நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.....அப்போது கிடைத்த மிக எளிய யோசனைதான் இது.....

அதாவது வீட்டுக் குடிநீர் குழாயில் எப்போது தண்ணீர் வரப்போகிறது என்றாலும்.....
அதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பே காற்று ஏராளமான அழுத்தத்தோடு பைப்பில் இருந்து வெளிவரத் துவங்கும்.....

அதனால் இந்த ஐந்து ரூபாய் பிளாஸ்டிக்  "விசிலை" பைப் மூடியில் (addoptor) துளையிட்டு  "anabond paste" கொண்டு ஓட்டிவிட்டேன். ....

வேலை முடிந்தது.....!!!

இப்போது குழாயில் குடிநீர் வந்து சேரும் முன்பாக   15 நிமிடங்கள் வெளிவரும் காற்றின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது......(டவுன் பஸ் நடத்துநர் நம் காதுக்கு அருகிலே விசில் அடிப்பதைப்போல......)

இப்போதெல்லாம் எந்த நேரம் குழாயில் குடிநீர் வந்தாலும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.....

இதுபோன்ற குடிநீர்க்குழாய் பிரச்சினை இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.....100% வெற்றி......உறுதி...!!!

நாம் எதிர்கொள்ளும் எல்லா மிகப்பெரிய பிரச்சினைகளுக்கும் ஒரு மிக மிக எளிய தீர்வும் உண்டு........

பகிர்வு..🙏

கவனம் நண்பர்களே, நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்...

             
சமீபத்தில் எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார், 


நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அவர் ஆன் ரோடு விலை Rs.58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...

அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..

மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....

நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், 

அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் 

அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும் 

மேலும் அந்த தொகை வாகனத்தின் இன்வோய்ஸ் தொகையில் வெறும் 8 சதம்வீதம் செலுத்தினால் போதும். 

மேலும் பதிவு தொகை வெறும் 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோம்...

அடுத்த படியாக இன்சூரன்ஸ் பற்றி நண்பர்களிடம் விசாரித்தோம் அவர்கள் சொன்னதும் வியப்பாக இருந்தது...

அதாவது நாம் வாகனம் வாங்கும் போது நம்மை ஷோரூமில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் அவர்களிடம் tie-up யில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பெனியை வலுக்கட்டாயமாக பரிந்துரைத்து அதிக பணத்தை பெற்று வருவதும், 

அதே காப்பீட்டு திட்டத்தை குறைந்த விலையில் பிற நிறுவனங்கள் கொடுப்பதையும் அறிந்தோம்....

இந்த பகல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு புதிய வாகனம் வாங்கிய அந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு நேராக அந்த இரு சக்கர விற்பனை மையத்தை அடைந்தோம்...

அங்கிருந்த விற்பனை மேலாளரிடம் மேற்படி அதிக தொகை வசூலித்த விபரத்தை தெரிவித்து, அதனை திரும்ப தர கூறினோம்...அவரும் rules எல்லாம் சொல்லி பார்த்தார்...பிறகு நாங்கள் அங்கு நடக்கும் insurance முறைகேடு RTO பதிவிற்கு அதிக தொகை வசூலிக்கும் அந்த நிறுவனத்தின் மீது எடுக்க போகும்   நடவடிக்கை பற்றி இதமாக தெரிவித்து விட்டு அலுவலகம் வந்துவிட்டோம்....

அரைமணி நேரத்தில் அந்த  மேலாளர் தொலை பேசியில் எனது எண்ணிற்கு அழைத்து வருத்தம் தெரிவித்ததுடன் அதிக படியாக பெற்ற ரூபாய் 6800/- பெற்று செல்லுமாறு கூறினார்...

பணம் திரும்ப கிடைத்தது எனது உறவினருக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது...
இது அனைத்து இடங்களிலும் நடக்கிறது...யாரும் கண்டு கொள்வதில்லை.. புதிய வாகனம் வாங்கும் பரவசத்தில் அல்லது எப்படி முறையிடுவது என்ற பயத்தில் கடந்து விடுகிறோம்....

இதை படிக்கும் அனைவரும் நமது நண்பர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்...

Leading Sector Less Price with Debt Free Stock

Star Cement



Market Cap: 3867 Cr
CMP: 93.80
52WH: 104
52WL: 56
Book Value: 47.50
Dividend Yield: 1.07%



Fundamental 
ROCE: 18%
ROE: 16%
Face Value: 1
PE: 14.70
Industry P/E: 31.34
EPS: 6..32

DeliverableS: 58.66
Volume: 167192

Price History

2018 JAN 152price onward continue drop down now 60price


Promoters Holding: 62.17
Pledge: 0
FII: 0.18
DII:8.29 
Mutual Funds: 7.43
Others 24.36


Financial Statement









Stock Market