மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை !

உன்னிடம் என்ன கேட்டேன்
மலரெனும் காதல் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
அன்பெனும் முத்தம் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னிலிருக்கும் என்னைக் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னுடன் தனிமை கேட்டேன்

தந்தாயா ... தந்தாயா ... தங்கமே ..?

காதல் கொண்டாய் !
முத்தம் தந்தாய்
முடிவின்றி மொத்தமாய்
பெற்றுக் கொண்டாய் !
என்னைக் கேட்ட உன்னிடம்
உன்னையே தந்தாய் !
தனிமை கேட்ட என்னிடம்
மஞ்சள் நாண் தந்தாய்
மங்களம் கண்டாய்
இருவர் கூடி - முடிவில் ...
ஈரிரு நால்வர்  தந்தாய் ..!

கண்ணே !
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
நல்லதோர் குடும்பம் கண்டு
சொர்க்கம் தந்தாய் தங்கமே !

#பருத்திஇக்பால்.