இரத்த தானம் செய்வோம்

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை , உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதோடு, உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ரத்தம் உள்ளது. ரத்தம் இன்னொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் அதிசய பொக்கிஷம்.


அறிவியலில் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும்,நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருந்தாலும்,ரத்தம் என்ற அதிசய திரவத்தை,செயற்கையாக இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
.
நம் உடலில் உள்ள ரத்தம், காயபட்டவர்களுக்கும், ரத்தம் தேவைபடுவோர்க்கும் வழங்க கூடிய ஒரு பரிசுப்பொருள்.விபத்துகளின் போது ரத்த இழப்பை ஈடுசெய்ய தற்றவர்களின் ரத்தம் தேவைபடுகின்றது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதும் கூடுதலாக ரத்தம் தேவைபடுகிறது. நாம் ஒவ்வொரு முறையும் தானமாக்க கொடுக்கும் ஒரு யுனிட் ரத்தமும் பல உயிர்களை வாழ வைக்கும்.