33 பொக்கிஷங்கள்

33 பொக்கிஷங்கள்
33 பொக்கிஷங்கள்

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது!


நன்றி:லப்பைக்குடிகாடு.காம்

படித்துவிட்டீர்களா?
மீண்டும் ஒருமுறை படியுங்களேன்.
ப்ளீஸ்

எகிறப் போகுது செல்போன் கட்டணம்..

எகிறப் போகுது செல்போன் கட்டணம்..

செலவைக் குறைக்க சூப்பர் பிளான்!
''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17 சதவிகிதம் வரை உயரப்போகிறது...''
பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.
ஒரு காலத்தில் பணக்காரர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தொலைபேசி, காலப்போக்கில் அனைவரது அத்தியாவசியப் பொருளில் ஒன்றாகிப் போனது! 1990-களின் இறுதியில் செல்போன் அறிமுகமான போது இன்கம்மிங் கால்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அதன் பிறகு இன்கம்மிங் கால்களுக்கான கட்டணம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, ஒருகட்டத்தில் இலவசமானது. அடுத்தகட்டமாக இன்னும் நிறையபேர் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து அவுட் கோயிங் கால்களுக்கான கட்டணத்தையும் குறைத்தார்கள். இரவில் போன் செய்தால் எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பதில் ஆரம்பித்து, இலவச எஸ்.எம்.எஸ்-வரை பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மக்களை இழுத்தன செல்போன் நிறுவனங்கள்.
அப்படி இதுவரை சலுகைகளைக் கொடுத்து வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது கட்டணங்களை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏர்செல்லும், டாடா டொகோமோவும் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்திவிட்டன. மற்ற மாநிலங்களில் ஏர்டெல், ஐடியா, வோடோஃபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் உயர்த்தலாம் என்கிறார்கள்.

செல்போன் நிறுவனங்கள் இப்போது திடீரென கட்டணத்தை உயர்த்த என்ன காரணம்?
இந்தியாவில் சுமார் 60.6 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். (ஆதாரம்: செல்லூலார் ஆபரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா- ஜூலை 2011 வரை). செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் இந்த வாடிக்கையாளர்களிடம் நன்றாக ஊறிவிட்டது. இனிமேல் இவர்களால் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதால், கட்டணத்தைக் கொஞ்சம் உயர்த்தினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றன செல்போன் நிறுவனங்கள்.
அடுத்து முக்கிய காரணம், மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகமானது இந்த வசதி. ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்பவர்கள் அடுத்த நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்ற இந்த வசதியை விரும்பியவர்கள் ஏற்கெனவே தாவி முடித்திருப்பார்கள். இப்போது கட்டணத்தை உயர்த்தினால் அவர்கள் இன்னொரு நிறுவனத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் செல்போன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

மூன்றாவது, செல்போன் நிறுவனங்களின் செலவு. கடந்த சில காலாண்டுகளாகவே செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாயை 3ஜி லைசென்ஸுக்காகச் செலவு செய்துள்ளன. ஆனால், 3ஜி சேவை மூலம் செல்போன் நிறுவனங்களின் வருமானம் இதுவரை உயரவில்லை. எனவே, கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
இவை எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கட்டணங்கள் குறைவாக இருப்பதால் அனைவரும் அதிகமாக செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நெருக்கடி அதிகமாகி, அதிக நபர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. இப்போது கட்டணத்தை அதிகரித்தால் செல்போன் நிறுவனங்களுக்கு இரண்டு விதத்தில் லாபம் கிடைக்கும். நடுத்தர மக்கள் செல்போனுக்கு என ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள், அதைத் தாண்டி அவர்கள் பேச மாட்டார்கள்.

இதனால் நெருக்கடி குறையும். அதே சமயத்தில் கட்டணத்தை அதிகரித்தாலும் அதுபற்றி கவலைப்படாத மேல்தட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை தரமுடியும். அவர்கள் அதிகம் பேசினால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்று நினைத்துதான் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த கட்டண உயர்வை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், இதை எப்படிச் சமாளிக்கலாம், எந்த பிளானை எடுத்துக் கொண்டால் செலவைக் குறைக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஹ்ஷீuக்ஷீதீவீறீறீதீuபீபீஹ்.நீஷீனீ இணையதளத் தின் சி.இ.ஓ. ஜெய்குமாரிடம் பேசினோம்.
''இப்போதிருக்கும் திட்டங்களில் சிறந்தது எது என்று சொல்ல முடியாது. செல்போனைப் பயன்படுத்துகிறவரின் தேவையை வைத்துதான் எந்த பிளான் சிறந்தது என்பது மாறும். ஆனால், எல்லோருக்கும் பொருந்தி வருகிற மாதிரி, செல்போனுக்காக நாம் செய்யும் செலவை எப்படி எல்லாம் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதைச் சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தார். இதோ அவர் கொடுத்த முத்தான டிப்ஸ்கள்.

முதலில் உங்களுடைய பிளானில் பழைய பில்களை சரிபாருங்கள். யாருக்கு அதிகம் பேசி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நெட்வொர்கில் இருக்கும் நண்பர்களுடனா அல்லது வேறு நண்பர்களுடனா, வெளி மாநிலமா, வெளிநாடா என்று பார்த்து, அதற்கேற்ப பிளானை மாற்றுங்கள்.

காலர் டியூன் வைத்திருந் தால் தயவு செய்து நீக்கிவிடுங்கள். அதன் மூலம் மாதம் 30 ரூபாய் மீதமாகும். இதை வைத்துக் கொண்டு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பேசலாம். (ஒரு நிமிடத்துக்கு 0.72 பைசா என்றால்). அதேபோல அடிக்கடி பாடல்களை மாற்றாதீர்கள். இதற்கு ஒவ்வொரு முறையும் டவுன்லோடு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதி இருப்பவர்கள், பேஸ்புக், கூகுள் டாக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி செலவில்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

இலவச எஸ்.எம்.எஸ்.களை முழுமையாகப் பயன்படுத்தலாம். இலவச எஸ்.எம்.எஸ்.களை வைத்துக் கொண்டு போன் செய்வது கூடுதல் செலவுக்குத்தான் வழி வகுக்கும்.

நிமிடத்துக்கு ஒரு கட்டணம், நொடிக்கு ஒரு கட்டணம் என்பதுபோல இரண்டு வகையான திட்டங்கள் இருக்கிறது. நீங்கள் அதிக நேரம் பேசுபவராக இருந்தால் நொடிக்கு கட்டணம் இருக்கும் திட்டங்களை தவிர்த்துவிடுங்கள். ஒரு நொடிக்கு 1.2 பைசா என்றால், ஒரு நிமிடத்துக்கு 72 பைசா. ஆனால், ஒரு நிமிடத்துக்கு என்றால் 60 பைசா என்று கட்டணம் இருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்துக்கு 12 பைசா நஷ்டம். நீங்கள் எத்தனை நிமிடம் அதிகம் பேசுகிறீர்களோ, அவ்வளவு நிமிடத்துக்கும் 12 பைசா நஷ்டம்.

இதைத் தாண்டி சந்தையில் புதிய பிளான்கள் வரும் பட்சத்தில் அந்த பிளானில் இருக்கும் சிம்மை வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த சர்வீஸ் புரவைடருக்கு நம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் மாறிக் கொள்ளலாம்''.

நிபுணர் சொன்ன இந்த டிப்ஸ்களைப் பின்பற்றுவதோடு, தேவைப்பட்டால் மட்டுமே செல்போனில் பேசும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், செலவு நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லையே!

Thanks To http://vikatan.com/

தாய்பாலின் அதிசயங்கள்.

தாய்பாலின் அதிசயங்கள்.
தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

கடைசித்தேதி நெருங்குகி​றது

சிறுபான்மையினர் ஸ்காலர்ஷிப்புக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

http://momascholarship.gov.in/minority_scholarship/tempStudEntry.html